பிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக’ மாட்டிக் கொண்ட ஓவியா!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சில மணி நேரங்கள் நடித்தார் நடிகை ஓவியா.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவு குறைவாகத் தரப்படும் என்ற உண்மையை பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் நடிகை ஓவியா.
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இரண்டாவது சீசனில் சிறப்பு விருந்தினராக சில மணி நேரங்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இவர் வசித்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் போட்டியாளர்களில் ஒருவராக நடிக்க வேண்டும் எனச் சொல்லி தான் ஓவியாவை கமல் உள்ளே அனுப்பினார். ஓவியாவும் கையில் பெட்டியுடன் போட்டியாளர் போன்றே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
அப்செட்:
ஆரம்பத்தில் சக போட்டியாளர்கள் அவரை நிஜமாகவே சீசன் 2 போட்டியாளர் என்றே கருதினர். இதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்குமே என்ற கவலை அப்பட்டமாக அவர்கள் முகத்தில் தெரிந்தது.
சமாளிப்பு:
ஆனால், நீண்ட நேரம் இந்த நிலை நீடிக்கவில்லை. மகத் உள்ளிட்டோர் ஓவியாவைச் சுற்றிச் சுற்றி வந்து அவர் நிஜமாகவே இம்முறையும் போட்டியாளரா என விசாரித்தனர். ஓவியாவும் முடிந்தவரை சமாளித்தார்.
ஒரு பெட்டி தானா?
போட்டியாளர் என்றால் ஏன் ஒரு பெட்டியுடன் வந்துள்ளீர்கள்? எங்களுக்கெல்லாம் இரண்டு தந்துள்ளார்களே என அவர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஓவியா கொஞ்சம் பதில் சொல்ல தடுமாறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகமானது.
குட்டு உடைந்தது:
அதன் தொடர்ச்சியாக அவரது பெட்டியைப் பிடுங்கி அவர்கள் சோதித்துப் பார்த்தனர். உள்ளே வெறும் வாட்டர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்பது உறுதியானது.
பிக்பாஸ் உத்தரவு:
ஓவியாவும் அப்ரூவராக மாறி, பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அவரை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். ஓவியாவும் அதன்படி வீட்டை விட்டு வெளியேறினார்.
பைனல் டச்:
முன்னதாக வீட்டில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு குறைவாகத் தான் கிடைக்கும் என்ற உண்மையைப் போட்டுடைத்தார். முதல் சீசனின் போது, 55 கிலோ எடையுடன் வந்த தான், வெளியேறும்போது 50 கிலோவாக எடை குறைந்ததாகத் தெரிவித்தார். அதோடு, வீட்டை விட்டு வெளியேற மெயின் கதவு அருகேச் சென்ற ஓவியா, அங்கிருந்த போட்டியாளர்களைப் பார்த்து, ‘உங்களை எல்லாம் பார்க்க பாவமாக இருக்கிறது. இங்க என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்' என போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் சென்றார்.