பரபரப்பு.. பிக் பாஸ் 7க்கு பிறகு புது நிகழ்ச்சியிலும் கேலி செய்த தினேஷ்.. கோபத்தில் விசித்ரா எடுத்த முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பிக் பாஸ் பிரபலமான தினேஷ், விசித்ரா இன்னும் ஒரு சிலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விசித்திரா திடீரென்று வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்தது போலவே விசித்ரா மற்றும் தினேஷுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது தினேஷ் விசித்திராவை கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. எந்த சீசனிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது. உள்ளிருந்த போட்டியாளர்கள் A மற்றும் B என்ற இரண்டு அணியாக பிரிந்து கொண்டு தங்களுடைய வன்மத்தை அடிக்கடி கக்கி கொண்டிருந்தனர்.

இதில் இவர்கள் சரி அவர்கள் தவறு என்று யாரையும் கூற முடியாத வகையில் தான் போட்டியாளர்கள் இருந்தனர். அதிலும் இந்த சீசனில் சில போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வெடித்துக்கொண்டு இருந்தது. அதில் தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்ற மாதிரி தான் காட்டிக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது, அதற்கு பிறகும் இவர்களுடைய கருத்து மோதல்கள் குறைந்த பாடு இல்லை. பிக் பாஸ்க்கு பிறகு தினேஷ் பேட்டி அளிக்கையில் கூட விசித்திரா மீது தனக்கு எந்த கோபமும் கிடையாது. உள்ளிருந்த சூழ்நிலையால் தான் நாங்கள் அப்படியெல்லாம் பேசிக் கொண்டோம் என்று கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதியதாக ஒரு கேம் ஷோ தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் விசித்திராவும் தினேஷும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் தினேஷ் விசித்ராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமான விசித்திரா எனக்கு இந்த நிகழ்ச்சியே தேவை கிடையாது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் நான் இவருடைய பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இங்கே அப்படி கிடையாது என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. தினேஷுக்கும் விசித்திராவிற்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆகாது என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இருவரையும் வைத்து நிகழ்ச்சி பண்ணினால் டிஆர்பி அதிகரிக்கும் என்று விஜய் டிவியில் புதியதாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகவும் ஆனால் அது பாதியிலேயே நின்று போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications