பரபரப்பு.. பிக் பாஸ் 7க்கு பிறகு புது நிகழ்ச்சியிலும் கேலி செய்த தினேஷ்.. கோபத்தில் விசித்ரா எடுத்த முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பிக் பாஸ் பிரபலமான தினேஷ், விசித்ரா இன்னும் ஒரு சிலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விசித்திரா திடீரென்று வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்தது போலவே விசித்ரா மற்றும் தினேஷுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது தினேஷ் விசித்திராவை கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. எந்த சீசனிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது. உள்ளிருந்த போட்டியாளர்கள் A மற்றும் B என்ற இரண்டு அணியாக பிரிந்து கொண்டு தங்களுடைய வன்மத்தை அடிக்கடி கக்கி கொண்டிருந்தனர்.

இதில் இவர்கள் சரி அவர்கள் தவறு என்று யாரையும் கூற முடியாத வகையில் தான் போட்டியாளர்கள் இருந்தனர். அதிலும் இந்த சீசனில் சில போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வெடித்துக்கொண்டு இருந்தது. அதில் தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்ற மாதிரி தான் காட்டிக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது, அதற்கு பிறகும் இவர்களுடைய கருத்து மோதல்கள் குறைந்த பாடு இல்லை. பிக் பாஸ்க்கு பிறகு தினேஷ் பேட்டி அளிக்கையில் கூட விசித்திரா மீது தனக்கு எந்த கோபமும் கிடையாது. உள்ளிருந்த சூழ்நிலையால் தான் நாங்கள் அப்படியெல்லாம் பேசிக் கொண்டோம் என்று கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதியதாக ஒரு கேம் ஷோ தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் விசித்திராவும் தினேஷும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் தினேஷ் விசித்ராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமான விசித்திரா எனக்கு இந்த நிகழ்ச்சியே தேவை கிடையாது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் நான் இவருடைய பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இங்கே அப்படி கிடையாது என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. தினேஷுக்கும் விசித்திராவிற்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆகாது என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இருவரையும் வைத்து நிகழ்ச்சி பண்ணினால் டிஆர்பி அதிகரிக்கும் என்று விஜய் டிவியில் புதியதாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகவும் ஆனால் அது பாதியிலேயே நின்று போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications