For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவர்தானா? முழு வாக்குகள் விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல் வாரத்தின் எலிமினேஷன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு படியே அமைந்து விடும் போல.

இருவருடைய மதிப்பெண்கள் குறைவாக இருப்பதால் இதில் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.

ரவி சாஸ்திரி போனதும் நீங்கதான் கோச்.. பிசிசிஐ அழைப்பு.. கும்பிடு போட்ட ராகுல் டிராவிட்.. என்னாச்சு? ரவி சாஸ்திரி போனதும் நீங்கதான் கோச்.. பிசிசிஐ அழைப்பு.. கும்பிடு போட்ட ராகுல் டிராவிட்.. என்னாச்சு?

தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்தால் சந்தோஷம் அடைவது போலவே தற்போது இவருடைய மதிப்பெண் குறைவு பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஐந்தாவது சீசனும் பட்டையை கிளப்புகிறது

ஐந்தாவது சீசனும் பட்டையை கிளப்புகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியை சீரியலுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று பல ரசிகர்கள் கூறும் வகையில் இது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. தற்போது நான்கு சீசன்கள் முழுமையாக முடிவடைந்து இருந்தாலும் ஐந்தாவது சீசனும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் இதை பற்றி விமர்சித்து கொண்டிருந்தவர்கள் நிகழ்ச்சி தொடங்கியதும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

முதல் வார எலிமினேஷன்

முதல் வார எலிமினேஷன்

ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனாக கடந்து கொண்டிருந்தாலும் தற்போது ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த காலகட்டம் வந்துவிட்டது. முதல் வாரத்தில் இந்த சீசனில் போட்டியாளர்கள் சந்தோஷமாகவும், ஜாலியாகவும் இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்தில் இவர்களுக்குள் எலிமினேஷன் என்று செய்தி வந்ததும் ஒரு சில பிரச்சனைகள் பூதாகரமாக மாறி வருகிறது. ஏற்கனவே போன வாரத்தில் நமிதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்று இருப்பது என்ன காரணம் என்று தெரியாத வகையில் அடுத்த எலிமினேஷன் வந்துவிட்டது.

Recommended Video

    Akshara Reddy ஒரு குழந்தை | Akshara அம்மா & அண்ணன் Shravan
    பாவனி தப்பிவிட்டார்

    பாவனி தப்பிவிட்டார்

    இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதில் ஒருவர் வெளியேறிய பிறகு 17 பேர் போட்டியில் இருந்தாலும் இதில் வீட்டின் தலைவராக இருக்கும் ஒருவரை தவிர மீதமுள்ள அனைவரையுமே எலிமினேஷன் செய்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் சொன்னதும் இந்த வீட்டின் தலைவராக இருக்கும் தாமரையை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே ஒருவரை மாற்றி ஒருவர் எலிமினேஷன் செய்துகொண்டிருந்தனர். இதில் பாவனிரெட்டி மட்டும் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் தப்பி விட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்து வருகிறது.

    அட இவரா முதல் எலிமினேஷன்

    அட இவரா முதல் எலிமினேஷன்

    ஆனால் மீதமிருக்கும் போட்டியாளர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆவார்கள் என்று மக்கள்தான் முடிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அபிஷேக் தான் கடைசி இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சின்ன பொண்ணு இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடைசி இடத்தில் இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களை தாண்டி இவர்களுக்கு அடுத்தபடியாக சுருதி, அதற்கடுத்து அபினய் என்று வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் கடைசி இடத்தில் இருக்கும் அபிஷேக் வெளியேறுவார??அல்லது அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சின்ன பொண்ணு வெளியிடுவாரா? ? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

    English summary
    Though the fifth season of Bigg Boss has started, the rituals that have taken place before are currently going on this season and fans are eagerly watching that they are such a chief minister every week as a competition on the show, the last of which is Abhishek, which has been a celebration for his negatives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X