பக்கத்தில் போலீஸோடு ராஜ மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட பிரதீப்.. முக்கிய இடத்தில் கிடைத்த கௌரவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரதீப்க்கு பிரபல பள்ளி ஒன்றில் பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி பிரதீப்பை வெளியேற்றி இருந்தாலும் அவருக்கு வெளியே ரசிகர்களின் மத்தியில் அதிகமான ஆதரவு இருக்கும் நிலையில் இப்போது பிரபல பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பிரதீப் கலந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் கவினின் நெருங்கிய நண்பரும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலமான நபர் தான் பிரதீப். அவர் ஏற்கனவே கவின் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய நண்பராக பேமிலி ரவுண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கவினை கன்னத்தில் ஓங்கி அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்
அதற்கு பிறகு டாடா, வாள் போன்ற சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரதீப் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆரம்பத்தில் இருந்து ஒரு முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வந்திருந்த நிலையில் சில போட்டியாளர்கள் இவர் மீது சில குற்றசாட்டுகளை கமலிடம் சொல்ல அதனால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.
இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இந்த சீசனில் ஹைலைட் என்று சொல்ற மாதிரிதான் இந்த நிகழ்வு நடந்தது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பிரதீப் வெளியேற்றி இருந்தாலும் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பிரதீப் தான் என்று கூறி வந்தனர். அவருக்கு தங்களுடைய ஆதரவையும் அடிக்கடி தெரிவித்துவரும் நிலையில் இப்போது பிரதீப்புக்கு
பெரிய அளவில் ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதாவது ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக. பிரதீப் அழைக்கப்பட்டு இருக்கிறார் அப்போது அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேடையில் பிரதீப்புக்கு பொன்னாடை போட்டு நினைவு பரிசுகளும் வழங்கி இருக்கின்றனர். அதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மாணவிகளின் முன்பு பிரதீப் கெத்தாக நின்று கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன பிரதீப்புக்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சீசனில் வெற்றி பெற்ற அர்ச்சனாவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லையே என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. வெளியே போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் மாயா குரூப்பை திட்டி தீர்த்து வரும் நிலையில் பிரதீப்புக்கு இப்போது கிடைத்திருக்கும் கௌரவத்திற்கு ரசிகர்கள் மேடைக்கு இப்போது பெருமை கிடைத்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications