Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த மனசு தாங்க.. ரவீனாவுக்காக அர்ச்சனா செய்த செயல் பாராட்டும் ரசிகர்கள்.. பிரதீப் சொன்னது சரிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா, ரவீனாவிற்கு செய்த செயல் குறித்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ரவீனா தன்னுடைய அரைஞாண் கயிறு பற்றி பிரதீப் பேசுகிறார் என்று கமல் முன்னிலையில் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

bigg boss tamil season 7 Archana comes there and hides that Raveena Arunakkayiru

இப்போது ரவீனா அணிந்திருக்கும் ஆடை கீழே இறங்கி இருக்கும் நிலையில் அவர் அணிந்திருந்த அரைஞாண் கயிறு வெட்ட வெளிச்சமாக வீடியோவில் தெரிந்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் அர்ச்சனா ரவீனாவின் அரைஞாண் கயிறு வெளியே தெரியாத வகையில் பில்லோ வைத்து மறைத்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்திருந்தது. காரணம் இந்த சீசனில் இரண்டு வீடு என்பது ஒரு பெரிய காரணமாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் முதல் வாரத்திலேயே விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு குறித்த விவாதம் பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதைத் தொடர்ந்து பிரதீப் உடைய திடீர் வெளியேற்றமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பிரதீப் குறித்து சிலர் பிரதீப்பால் பெண்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று குத்தப்பட்ட முத்திரை தவறானது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் பிரதீப் மீது பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் குற்றம் சாட்டி இருந்தனர். அப்போது ரவீனாவும் பிரதீப் என்னுடைய அருணாக்கயிறு குறித்து விமர்சிக்கிறார் என்று குற்றசாட்டு வைத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படியாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் 24 மணி நேரம் நிகழ்ச்சிகளில் ரவீனா அணியும் ஆடை விலகி இருக்கும் போது அவர் அணிந்திருக்கும் அரைஞாண் கயிறு வெளியே தெரியும் வகையில் பல இடங்களில் ரவீனா இருக்கிறார்.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களையும் வெளியிடும் ரசிகர்கள் இதனால் தான் பிரதீப் ரவீனாவை சரியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால் ரவீனா தான் பிரதீப் மீது கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விசித்திரா சொன்ன கதையை கேட்டு சக போட்டியாளர்கள் பலரும் அழுதிருந்தனர்.

அதில் முதல் ஆளாக ரவீனா ஓடி சென்று விசித்திராவை கட்டியணைத்து ஆறுதல் கூறியிருந்தார். பிறகு தனியாக சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எனக்கு எங்க அம்மாவை பார்க்கணும் போல இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் மணி ரவீனாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

அர்ச்சனா அங்கு வந்து ரவீனாவை சிரிக்க வைக்க காமெடி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ரவீனா அழுது கொண்டு அசையாமல் படுத்திருக்க ஒரு கட்டத்தில் அர்ச்சனாவால் எதுவும் செய்ய முடியாமல் அவர் விலகிப் போகிறார். அப்போதுதான் ரவீனாவின் ஆடை விலகி இருப்பதும் அவருடைய அரைஞாண் கயிறுவெளியே தெரிகிறது.

உடனே அர்ச்சனா அங்கிருக்கும் பில்லோவை வைத்து ரவீனாவின் பின்பக்கத்தை மூடி வைக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ரவீனாவின் மானத்தை மறைத்ததாக கூறி அர்ச்சனாவின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+