பிக் பாஸ் 7: வெளியே போக அழுத அர்ச்சனா.. சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ்.. பிக் பாஸ் எடுத்த முக்கிய முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ஆம் தேதி மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கூல் சுரேஷ் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்கிறார்.
இதனால் கோபமான பிக் பாஸ் கூல் சுரேஷுக்கு வார்னிங் கொடுக்கிறார். அதே நேரத்தில் அர்ச்சனாவும் நானும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க் நடக்கும் போதும் ஒரு சுவாரசியமான சம்பவங்கள் நடந்து விடுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சில பிரச்சனைகள் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் தான் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மராத்தான் ஷோ நடைபெற்று வருகிறது.
அதில் விஷ்ணு போக்கிரி விஜய் ஆகவும், மணி வாரணம் ஆயிரம் சூர்யாவாகவும், தினேஷ் படையப்பா ரஜினி ஆகவும், விசித்திரா நீலாம்பரி ஆகவும், மாயா ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா வாகவும், கூல் சுரேஷ் அவருக்கு பிடித்த மன்மதன் எஸ்டிஆர் ஆகவும், பூர்ணிமா பருத்தி வீரன் முத்தழகு கேரக்டரிலும், ரவீனா ஹாசினியாகவும், அர்ச்சனா திமிரு ஈஸ்வரியாகவும், விஜய் வர்மா மாதவன் கேரக்டரிலும்,
நிக்சன் காதல் கொண்டேன் தனுஷ் ஆகவும், விக்ரம் வெற்றி கொடி கட்டு சுடலை வடிவேலுவாகவும், அனன்யா கஜினி திரைப்படத்தில் அசின் ஆகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எல்லோருக்கும் பாசிட்டிவான கதாநாயகி கேரக்டர் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் வில்லி கேரக்டர் தந்திருக்கிறார்கள் என்று அர்ச்சனா அழுதபடியே என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுங்கள் என்று பேசிக் கொண்டே இருந்தார்.
ஒருவேளை என்னுடைய கேரக்டர் வெளியே வில்லியாக போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் எனக்கு வில்லி கேரக்டர் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதனால் நான் இப்போதே வெளியே போக வேண்டும் என்று அர்ச்சனா ஒரு பக்கத்தில் அழுது கொண்டு இருக்க, நான் வீட்டுக்கு போயி ஆக வேண்டும் என்று கூல் சுரேஷ் அங்கிருக்கும் சுவரில் ஏறி வெளியே போவதற்காக முயற்சி செய்து பிக் பாஸ் இடம் மாட்டி கொண்டிருக்கிறார்.
இதனால் கோபமான பிக் பாஸ் கூல் சுரேஷிடம் என்ன பிரச்சனை என்று பேச, அதற்கு கூல் சுரேஷ் எனக்கு வீட்டின் ஞாபகம் ஆகவே இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அதற்கு பிக் பாஸ் கூல் சுரேஷ்க்கு அறிவுரை கூறியிருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஸ் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா இல்லையா என்று ப்ரோமோவில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications