பிக் பாஸ் 7: தொடங்கியது கோர்ட் டாஸ்க்.. கிழிக்கப்பட்ட மாயாவின் முகத்திரை.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 9ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று கோர்ட் டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் தங்களுக்கு யார் மீது கோபம் இருக்கிறதோ அவர்கள் மீது எதிர்தரப்பு போட்டியாளர்கள் வழக்கு தொடர்கின்றனர்.

மாயா மீது விசித்திரா வழக்கு தொடர விசித்திரா மீது மாயா வழக்கு தொடர்கிறார். இந்த நிலையில் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது அது பற்றி பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது சர்ச்சைகளாலே ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் பிரதீப் உடைய எதிர்பாராத வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது. அதனாலேயே அதிகமானோர் பிக் பாஸை டேக் செய்து பிரதீப்க்கு ஆதரவாக தொடர்ச்சியாக பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல நடிகர்கள் நடிகைகளும் பிரதீப்க்கு ஆதரவாக பல சேனல்களுக்கு அடுத்தடுத்து பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்களோ அதை எல்லாம் நேற்று பிக் பாஸ் அனைவர் முன்னிலையிலும் போட்டு காட்டி புதியதாக பிரச்சனையை கொளுத்தி விட்டு இருக்கிறது.
நிக்சன் வினுஷாவை பற்றி பேசியது, அதுபோல தினேஷை ஆம்பளையா என ஜோவிகா பேசியது போன்ற பல ரகசியங்கள் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகி இருந்தது. இதை தொடர்ந்து இன்று அடுத்த பிரச்சனையை பிக் பாஸ் கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நீதிமன்ற டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க்காக தான் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

காரணம் ஒவ்வொரு சீசனிலும் இந்த நீதிமன்றம் டாஸ்கின் போது பல பிரச்சனைகள் வெடித்து வரும். அதுபோல இந்த சீசனிலும் இன்று அந்த டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முதல் ஆளாக விசித்ரா தன்னுடைய வழக்கினை பதிவு செய்கிறார். அதில் மாயா தன்னுடைய கேப்டன் பதவியை மிஸ் யூஸ் பண்ணுகிறார் என்று கம்பளைண்ட் வைத்திருக்கிறார். அதை தொடர்ந்து மாயா, விசித்திரா என்னுடைய டூட்டியை செய்ய விடமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதை தொடர்ந்து கோர்ட் டாஸ்க்கில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் விசித்திரா மீது கானா பாலா வழக்கு தொடர்கிறார். அர்ச்சனா மீது ஜோவிகா வழக்கு தொடர்கிறார். அதுபோல தினேஷ், மாயா மீது வழக்கு தொடர்கிறார். இப்படியாக இவர்கள் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் இன்று நீதி வென்றதா? சூழ்ச்சி வீழ்ந்ததா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications