Bigg Boss 8 finale- வில் கமல்ஹாசனுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி.. அந்த வார்த்தை ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7 சீசன்களாக கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே தான் இந்த சீசனில் இருந்து ரெஸ்ட் எடுக்க போவதாக கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. அதில் ஆரம்பத்தில் இருந்து சர்ச்சைகளும் வதந்திகளும் வழக்கம் போல வந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு போய்க் கொண்டிருந்தார். வார இறுதி நாட்களில் இவர் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதுபோல விஜய் சேதுபதி குறித்தும் அதிகமான ட்ரோல் வரதான் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னை பற்றி கூட பரவி வரும் ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் குறித்து விஜய் சேதுபதி அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தார். இந்த நிலையில் இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சி முடிவடைந்து இருக்கிறது.
8வது சீசனில் முத்துக்குமரன் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் தேர்வாகி இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் விஜே விஷால் நான்காவது இடத்தில் பவித்ரா மற்றும் ஐந்தாவது இடத்தில் ரயான் தேர்வாகி இருக்கிறார்கள். அதுபோல அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இவ்வளவு உருவாகி இருக்கிறார்கள். அவர்தான் ஏழு சீசன்களாக ரசிகர்களை கட்டி வைத்திருந்தார். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கும் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. என்னால் அவரைப் போல செய்ய முடியவில்லை என்றாலும் என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன் என்று எமோஷனலாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications