Bigg Boss finale- வில் கமல்ஹாசனை பாலோ செய்த விஜய் சேதுபதி.. அந்த வார்த்தை தான் ஹைலைட்!
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஏழு சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசனை இந்த சீசனில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி பாலோ செய்து இருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்றாலே அதற்கு அடையாளமாக கமல்ஹாசன் தான் இருந்து வந்தார். முதல் சீசனில் இருந்து 7 சீசன்கள் வரைக்கும் அவர்தான் தொகுப்பாளராக இருந்தார். தமிழில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது இதுவெல்லாம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே நேரத்தில் முதல்முறையாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். அது போல ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் நடுநிலைத் தவறாமல் தீர்ப்பு சொல்வது மற்றும் போட்டியாளர்களின் மனம் கோணாமல் அவர்களின் குறைகளை அவர்களுக்கே சொல்வது சொல்வது, அதுபோல வார இறுதி நாட்களில் புத்தக பரிந்துரை செய்வது, அரசியலை அங்கே இங்கே மெல்ல மெல்ல தூவுவது என்று கமல்ஹாசன் தன்னுடைய தனி அடையாளத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டி இருந்தார்.
ஆனால் 8வது சீசன் தொடங்குவதற்கு முன்பே அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்தார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி எட்டாவது சீசனில் கமிட் ஆகி இருந்தார். விஜய் சேதுபதி தன்னுடைய தனி ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் இவருடைய எபிசோடு பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது. இதுவரைக்கும் எந்த இடத்திலும் கமல்ஹாசனை பாலோ செய்யாமல் விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும் இன்று பைனல் நிகழ்ச்சியில் ஃபைனலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் அவர்களை கமல்ஹாசனை போலவே சந்தித்திருக்கிறார்.
அப்போது பைனல் போட்டியாளர்கள் ஐந்து பேருக்கும் அவர்களுடைய மறக்க முடியாத புகைப்படத்தில் தன்னுடைய கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கிறார். இதுபோல கமல்ஹாசன் எல்லா சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பைனல் போட்டியாளர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அதே ஸ்டைலில் விஜய் சேதுபதியும் பாலோ செய்து இருக்கிறார்.
அப்போது விஷால் தனக்கு கையெழுத்து போடும்போது நீங்கள் என்னை தம்பி என்று எழுதுங்கள் சார் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி சிரித்தபடியே சரி என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு நான் டீலக்ஸ் படத்தில் ஒரு வசனம் வரும், ஒரு இடத்தில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கு தகுந்த போலவே நாம இருந்து விட வேண்டும். அந்த இடத்தில் நாம் வேறு விதமாக இருந்தால் நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.. என்று அந்த வார்த்தையை நான் பிரேம் செய்து எங்கள் வீட்டில் மாட்டி இருக்கிறேன். அதுபோல உங்களுக்கு எந்த விஷயம் உங்களை ஹைலைட்ஸ் செய்கிறதோ அதை நீங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications