விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து ஷாக்.. கங்குவா படத்தை ஒப்பிட்டு நடிகர் போஸ் வெங்கட் பேசியதால் விவாதம்
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தான். திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த விஜய், முழுநேர அரசியலுக்குள் களமிறங்கியதும் அது வெறும் பிரபலத்தின் வருகையாக மட்டும் பார்க்கப்படவில்லை, தமிழக அரசியல் கணக்கையே மாற்றக்கூடிய ஒரு சக்தியாகவே பலரும் பார்த்தனர். அதே நேரத்தில், விஜயின் அரசியல் வெற்றியை சந்தேகத்துடன் பார்த்தவர்களும் ஏராளம். அந்த பட்டியலில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டும் ஒருவர்.

முதல்வர் விஜய் பற்றிய விமர்சனங்கள்
ஆரம்பம் முதலே விஜயின் அரசியல் வருகை குறித்து போஸ் வெங்கட் விமர்சனமாகவே கருத்து தெரிவித்திருந்தார். திமுக சார்பான நிலைப்பாட்டில் இருப்பவர் என்பதால், "தமிழக அரசியல் என்பது சினிமா ரசிகர் மன்றம் மாதிரி இல்லை; இங்கே வெற்றி பெற அரசியல் தரை வேலை வேண்டும்" என்ற வகையிலான விமர்சனங்களும் முன்வந்தன. விஜயின் மக்கள் ஆதரவு தேர்தல் வெற்றியாக மாறாது என்ற கருத்தும் பல இடங்களில் பேசப்பட்டது.
ஆனால் அரசியல் களம் எதிர்பாராத திருப்பத்தை கண்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட விஜய், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் கணிசமான ஆதரவை உருவாக்கி இருந்தாள். அவரது நேரடி சந்திப்புகள், பொதுக்கூட்டங்கள், அரசியல் பேச்சுகள், கட்சியின் தரை மட்ட செயற்பாடுகள் ஆகியவை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நடிகர் போஸ் வெங்கட் கருத்து
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், விஜய்யின் வெற்றி குறித்து ஆச்சரியமான கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, "கங்குவா படத்தை ரொம்ப நம்பினேன். இந்த படம் வந்தால் வாழ்க்கையே மாறிடும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்பது இன்னும் எனக்கு புரியாத புதிர். அதேபோல இப்போது விஜய் சார் எப்படி வெற்றி பெற்றார் என்பதும் எனக்கு புரியவில்லை. அவர் வெற்றி எப்படி ஒரு புதிரோ, அதே மாதிரி கங்குவா தோல்வியும் ஒரு புதிர்தான்" என்று கூறியிருக்கிறார்.
இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்பு விஜயின் அரசியல் வாய்ப்புகளை குறைத்து மதிப்பிட்டவர் போஸ் வெங்கட் என்ற இமேஜ் இருந்த நிலையில், இப்போது அவரது வெற்றியை "புரியாத புதிர்" எனக் கூறியிருப்பது பலவிதமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
ரசிகர்கள் கருத்து
ஒரு தரப்பினர், "இது விஜய்யின் வெற்றியை ஒப்புக்கொள்ளும் மறைமுகமான கருத்து" என கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர், "அவரால் இன்னும் அந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே இது" என்று விமர்சிக்கின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள், "முன்பு ஜெயிக்க முடியாது என்றவர்கள் இப்போது காரணமே புரியவில்லை என்கிறார்கள்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கங்குவா படத்தை எடுத்துக்காட்டாக கொண்டு அரசியல் வெற்றியை ஒப்பிட்டு பேசியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமாவில் எதிர்பார்ப்பு எப்படி பலமுறை கணிக்க முடியாத முடிவுகளை தருகிறதோ, அதேபோல அரசியலும் பல நேரங்களில் கணிப்புகளை தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கே இது உதாரணம் என சிலர் கூறுகின்றனர்.
எதுவாக இருந்தாலும், விஜயின் அரசியல் வெற்றி இப்போது எதிரணியினரையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பேசுபொருளாக மாறியிருப்பது மட்டும் உறுதி. அந்த பட்டியலில் தற்போது போஸ் வெங்கட்டின் இந்த கருத்தும் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications