அக்கா ரொம்ப டல்லடிக்குதுக்கா.. சந்திராவை சீக்கிரம் கண்டுபிடிக்க கூடாதா?!
சென்னை: சன் டிவியில் நேரம் மாறி ஒளிபரப்பாகிட்டு வர்ற சந்திரகுமாரி சீரியல் ராதிகா இல்லாம ரொம்ப டல்லடிக்குதுப்பா.. அவங்க சீரியல்ல அவங்க இல்லாம இருந்தா எப்படிங்க.
பொண்டாட்டிய புடிக்கலேன்னு வேற ஒருத்தி கூட வாழறது. சேந்துக்கிட்டவ அவங்க குடும்பத்தை கெடுத்து, கூட்டிச் சுவராக்க நினைக்கறதுன்னுதான் இப்போதைக்கு கதை போகுது.

நிஜமாவே ராதிகா இல்லேன்னா வேற வழி இல்லையா அவங்க கதைக்கு. முதல்ல சந்திராவை காணோம்னு சொன்னீங்க.. இப்போ அவங்க பொண்ணு அஞ்சலியையும் கைது பண்ணி ஜெயில்ல வச்சு இருக்கீங்க.
மொத்தமா சீரியல்ல ஒரு 12 பேர் இருப்பாங்கன்னு எண்ணி சொல்லிடலாம். அந்த 12 பேருல ரெண்டு பேர் நடிக்கவே வாய்ப்பில்லாத போலீஸ்காரங்க. அப்புறம் சீரியல்ல கதை எப்படி இருக்கும், வழிப் போக்கருங்க பேசிக்கற மாதிரிதான் இருக்கும்.
சீக்கிரமா சந்திராவை கண்டு பிடிச்சுருங்க.. சட்டு புட்டுன்னு கதையை மாத்தி, சுறுசுறுப்பா கொண்டு போங்க.. தேவிப்பிரியாவை அநியாயமா ரொம்ப கவர்ச்சியா காமிக்கறீங்க.. அவங்க என்ன, சந்திராவோட பொண்ணு அஞ்சலியா? தேவிப்பிரியா கவர்ச்சியை கொஞ்சம் இல்லை சுத்தமாவே குறைச்சுக்கலாம்.












Click it and Unblock the Notifications