ராதிகா தொடரை திடீரென மாலை நேரத்துக்கு மாற்றியதால் வாசகர்கள் அதிர்ச்சி.. பரபரப்பு!
Recommended Video

சென்னை: ராதிகாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஓடிக் கொண்டிருக்கும் சந்திரகுமாரி தொடரை மாலை நேரத்துக்கு மாற்றி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் சந்திரகுமாரி. விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த்த தொடரில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சினிமா நடிகை பானு அவரது மகளாக வருகிறார். மேலும் ராதிகா நிறுவனத் தொடர்களில் நடிக்கும் பலரும் இதில் வருகின்றனர்.
இரவு 9. 30 மணிக்கு இந்தத் தொடர் வெளியாகி வந்தது இந்த நிலையில் வருகிற 18ம் தேதி முதல் இதன் நேரத்தை திடீரென மாற்றியுள்ளனர். அதாவது மாலை 6.30 மணிக்கு இந்தத் தொடரை மாற்றியுள்ளனர். இதுகுறித்து ராதிகாவே டிவீட் போட்டுள்ளார்.
|
டிவீட் போட்ட ராதிகா
ராதிகா போட்டுள்ள டிவீட்டில், சந்திரகுமாரி தொடர் மார்ச் 18ம் தேதி முதல் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடர்ந்து பாருங்கள், ஆதரவு கொடுங்கள் என்று அதில் ராதிகா கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் வாசகர்கள்
இந்த திடீர் டவீட்டால் ராதிகா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை ஏற்க முடியாது என்றும் என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போிம் என்றும் அவர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
|
ராணிமாவுக்கு ஆதரவு
என்னுடைய அன்பும் ஆதரவும் எப்பொழுதும் என் உயிர் ராணிமா (ராதிமா ) மட்டுமே!! என்றும் எப்பொழுதும் மாறவே மாறாது ராதிகாமா !! ( Love u Rani maa )
|
உங்களுடன்தான் எப்போதும்
நாங்க எப்போதும் உங்களோடதான் இருப்போம் மா....உங்களோட மட்டும் தான்இருப்போம்
|
எதிராக யார் செயல்பட்டாலும்
அம்மா என்ன நடந்தாலும் உங்களுக்கு எதிராக யார் என்ன சதி செய்தாலும் உங்களுக்காக எப்பவுமே நாங்க இருப்போம் அம்மா என்று இந்த ரசிகர் கூறியுள்ளார்.
என்ன நடக்கிறது ராதிகா தொடருக்கு. குழப்பமா இருக்கே.












Click it and Unblock the Notifications