வீல் சேரில் வந்த செஃப் தாமு.. குக் வித் கோமாளி செட்டில் நடந்த சம்பவம்.. கண் கலங்க அவரே சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். நான் இப்போது சூட்டிங்க்கிற்கு வீல் சேரில் வந்து கொண்டிருக்கிறேன் அதற்கு இதுதான் காரணம் என்று தாமு பேசியதை கேட்டு பலரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிவடைந்து இப்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து நடுவராக செஃப் தாமு இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட்டும் நடுவராக இருந்தார். அவரோடு இணைந்துதான் செஃப் தாமுவும் நடுவராக மாறி இருந்தார். ஆனால் நான்காவது சீசனிலிருந்து வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.

செஃப் தாமு பேட்டி
அதை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் செஃப் தாமுவுடன் மாதப்பட்டி ரங்கராஜன் நடுவராக கலந்து கொண்டார். இவர்களுடைய கூட்டணியும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஐந்தாவது சீசன் முடிவடையப் போகும் நேரத்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடந்த ஐந்தாவது சீசனாக சில சர்ச்சைகளும் எழுந்து வந்தது.
வெற்றிக்கு காரணம் கோமாளிகள்
இப்போது ஆறாவது சீசன் தொடங்கப்பட்ட வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நீங்கள் சில வாரங்களாக செஃப் தாமு வீல்சேரில் சூட்டிங்க்கிற்கு வந்து கொண்டிருக்கிறார். அது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதோடு குக் வித் வத்து கோமாளி நிகழ்ச்சி பற்றியும் பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் கோமாளிகள் தான் இங்கே எல்லாமே. கோமாளிகள் இல்லாட்டி இந்த நிகழ்ச்சியே இல்லை."
40 வருட கனவு
அதிலும் "புகழ், சுனிதா, குரேஷி இவங்க தான் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியம். நான் தினமும் அவங்களை பாராட்டுவேன். இந்த நிகழ்ச்சியுடைய பைனலுக்கு பிரியா, லட்சுமி நாராயணன், நந்தகுமார், ராஜு போற்றோர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல எனக்கு பத்மபூஷன் விருது சமீபத்தில் தான் கிடைத்தது. அந்த விருது என்பது எனக்கு 40 வருஷ கனவாக இருந்தது. அதுவும் சமையல் துறையில் எனக்கு அந்த விருது கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சி.
எலும்பு உடைந்து விட்டது
எனக்கு விருது கிடைத்ததற்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறுவேன். ஆனால் நான் விருது வாங்கிவிட்டு இறங்கும்போது கால் பிரண்டு கீழே விழுந்து விட்டேன். அப்போது இடுப்பு எலும்பு உடைஞ்சிருச்சு. அதனால் நான் இப்போது சூட்டிங்க்கிற்கு வீல் சேரில் தான் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு சில வாரத்தில் சரியாயிடும்னு நம்புறேன் என்று அந்த பேட்டியில் தாமு கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications