Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மூங்கில் காடெரிய சிறு தீ ஒன்று போதும்... வீட்டுல இளசுகளின் விசில் பறக்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை; விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில் பல நல்ல விஷயங்களை பார்க்க முடியுது. காரணம் என்னன்னா சின்னத்தம்பி தன்னோட அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் செய்ய பல ஏற்பாடுகளை செய்யறார்.

60ம் கல்யாணம்னா சும்மா ஜாலிக்குன்னு சொல்ல முடியாது., ஆதர்ஷ தம்பதிகளா வாழ்ந்தவங்களுக்குத்தான் அது மிகப் பொருத்தமான ஒண்ணா இருக்கும். சும்மா எலியும் பூனையும் மாதிரி, எரிச்சலும் சன்டையும், அடியும், உதையுமா வாழ்ந்துகிட்டு இருந்த தம்பதிக்கு 60ம் கல்யாணம் செய்து வச்சா இது தேவையான்ற மாதிரிதான் கேள்விகள் எழும்.

இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விளக்கி பேசும்போது சின்னஞ்சிறுசுகளுக்கும் ஒரு பாடம் புகட்டும் அறிவுரை கிடைச்ச மாதிரி இருக்கும்.அப்படித்தான் இங்கு சின்னத்தம்பி,யோட அப்பா அம்மா பேச, கணவன் மனைவியா பேருக்கு வாழும் நந்தினி, சின்னத்தம்பி, ஜானு,அர்ஜுன் இவங்களுக்கு பல்வேறு குற்ற உணர்ச்சி வருது.

Also Read | இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த பாம்பையே பிடிச்சுட்டு அலைவீங்க பாஸ்.. நாகினி பரிதாபங்கள்!

சந்தேகம்

சந்தேகம்

மலருக்கு தன் காதலன் ஆரா மேல சந்தேகம் வந்துருது... ஆரா நம்மை உண்மையா காதலிக்கறானா, இல்ல வெறும் டைம் பாஸ் தானான்னு.பல குழப்பம். தனியாக அறையில் உட்கார்ந்து யோசிச்சுகிட்டு இருக்கா. அங்கே அவன் காதலன் ஆரா என்ட்ரி.

செவப்பா

செவப்பா

ஆரா, என்னை நீ உண்மையாவே காதலிக்கறியா... இல்லை டைம் பாஸுக்கா கலக்கத்துடன் கேட்கறா. இல்லை ஆரா மனசு சரியில்லை.. அதான் கேட்டேன்.என்னடி என் மேல சந்தேகப்படறியா, நீ கருப்பா செவப்பா, ஒல்லியா, குண்டான்னு கூட தெரியாம வெறும் போன்லேயே ஒரு வருஷம் காதலிச்சவன்டி..என்னைய போயி சந்தேகப்படறேன்னு கேட்கறான்.

கழிச்சு

கழிச்சு

ஒரு வருஷம் கழிச்சு உன்னை நான் எப்பிடி பார்த்தனோ அது என் கண்ணுல அப்படியே நிக்குதுடி. உன்னை நம்ப வைக்கணும்னா சொல்லு, என் கண்ணை கட்டிக்கிட்டு, நான் பார்த்த உன் உருவாத்தை அப்படியே வரையறேன்னு சொல்றான்

அச்சு அசல்

அச்சு அசல்

கண்ணைக் கட்டிக்கொண்டு வரைய ஆரம்பிக்கிறான். முடிச்சுட்டு மலரிடம் கொடுக்க என்ன ஆச்சரியம், கூந்தலை ஒரு பக்கம் மட்டும் படர விட்டு இருக்கும் அழகிய முகம். பார்த்ததும் அதிர்ந்து விடுகிறாள் மலர்.ஓடிச்சென்று ஆராவைக் கட்டிக்கொள்ள

மண்ணும்

மண்ணும்

வானும் மண்ணும் இன்று கட்டிக் கொண்டதே... மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே .. ஒரு மூங்கில் காடெரிய சிறு தீ ஒன்று போதும்... அது பொசுக்கென்று தோன்றியதேன்னு தல பாட்டுங்க.. வீட்டுல இளசுகளின் விசில் பறக்குது. சீரியலும் அப்பப்போ மக்களை குஷிப் படுத்தத்தான் செய்யுதுங்கோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+