அண்ணாச்சியால் வீடே வெறிச்சோடி போய்விட்டது... ஃபீல் பண்ணும் போட்டியாளர்கள்
சென்னை: அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் போட்டியாளர்கள் பலர் புலம்பி வருகின்றனர்.
அண்ணாச்சியின் வெளியேற்றம் ரசிகர்களையும் வெகுவாகவே பாதித்து விட்டதாம்.
இதுதான் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வதா என்று பலர் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

வழக்கமாக நடப்பதுதான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் வெளியே செல்வது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி சென்று கொண்டுதான் இருக்கின்றார். ஆனால் ஒருசில போட்டியாளர்களின் வெளியேற்றம் தான் ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் பீல் பண்ண வைத்துவிடுகிறது.
என்னதான் தாங்களே இவர்கள் வெளியேற வேண்டும் என்று ஓட்டு போட்டு தேர்வு செய்தாலும் அவர்கள் வெளியேறும்போது ரொம்பவே ஃபீல் பண்ணி விடுகின்றனர். இது உண்மையில் நிஜம்தானா என்று சில நேரங்களில் ரசிகர்களையும் சிந்திக்க வைத்து விடுகிறது.

ஃபீல் பண்ண வைத்து விட்டாரே
எத்தனையோ போட்டியாளர்கள் வெளியேறி கொண்டிருந்தாலும் ஒருசில போட்டியாளர்களின் வெளியேற்றம் தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. அந்த மாதிரி இந்த ஐந்தாவது சீசனில் இமான் அண்ணாச்சியின் வெளியேற்றும் ரசிகர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. அதேபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களையும் இது பாதித்திருக்கிறது. என்னதான் அண்ணாச்சியின் மீது அதிகமான கம்ப்ளைன்ட் வந்து கொண்டிருந்தாலும் அவர் விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் பலர் கூறிக் கொண்டிருந்தனர்.

சிபியின் கருத்து
இந்த வாரத்தில் ரசிகர்கள் பலர் தாங்கள் அண்ணாச்சிக்கு ஓட்டு போட்டும் அவரை வெளியே தூக்கி விட்டார்கள் என்று பீல் பண்ணி கொண்டு இருக்கும்போது, இந்த எதிர்பாராத வெளியேற்றம் பிக்பாஸ் வீட்டையும் ஆட்டம் காண வைத்துவிட்டது என்று சக போட்டியாளரான சிபி மற்றும் தாமரை கூறியிருக்கின்றனர். அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் வீடே வெறிச்சோடி போய்விட்டது என்று அவர்கள் ஃபீல் பண்ணியதை பார்த்து ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தின் போது போட்டியாளர்கள் பலர் அழுது கொண்டிருப்பது பார்க்கும் போது நெருடலாக தான் இருந்துகொண்டிருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆதரவு அதிகரித்து வருகிறது
பிக்பாஸ் வீட்டில் கடைசி நாள் வரைக்கும் எப்படியும் கூட்டி சென்று விடுவேன் என்று உறுதியாகக் கூறிக் கொண்டிருந்த ராஜு அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் கண்கலங்கி தூணில் கட்டி பிடித்தபடி அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்து பலர் நாங்களும் அழுது விட்டோம் என்று கூறி வருகின்றனர். என்னதான் அதுவரைக்கும் குரலை உயர்த்தி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் அனைத்து போட்டியாளர்களும் ஃபீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். அதனால் அண்ணாச்சிக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர ஹேஸ்டேக் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications