'கூலி’க்காக என்னை கெஞ்ச வச்சுட்டாங்க! லோகேஷ் செய்ததை எதிர்பார்க்கல! சத்யராஜ் அப்படி சொல்லிட்டாரு! ரஜினி ஓபன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினி பேசிய பல சுவாரஸ்யமான விஷயங்கள், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

லோகேஷின் திறமை
ரஜினி பேசியதாவது, "லோகேஷ் கனகராஜின் முதல் படமான 'மாநகரம்' நன்றாக ஓடியது. அதன் பிறகு, அவர் எங்கேயும் காணாமல் போனார். 'கைதி' படம் ஹிட் ஆன பிறகு, இயக்குநரின் பெயரை விசாரித்தபோது, லோகேஷ் கனகராஜ் என்று சொன்னார்கள். உடனே, அவரை அழைத்து, 'யாரும் முந்துவதற்கு முன், எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்' என்று கேட்டேன்," என்று ரஜினி கூறினார்.
விக்ரம் படம்
"லோகேஷ், எனக்கு ஒரு கதை சொன்னார். ஆனால், அந்த நேரத்தில், கமல் சார் போன் செய்து, 'விக்ரம்' படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், லோகேஷை உங்களுக்கு அனுப்புகிறேன்,' என்று சொன்னார். 'விக்ரம்' படம் வெளியானதும், லோகேஷை ஆளையே காணோம். நானும் வேறொரு படம் நடிக்கத் தொடங்கிவிட்டேன்," என்று ரஜினி குறிப்பிட்டார். "ஒரு நாள், அனிருத் வந்து, லோகேஷ் கதை சொல்ல வருவதாகச் சொன்னார். நான், 'ஏற்கனவே வந்தவர் இன்னும் வரவில்லை' என்று சொன்னேன். ஆனால், 'இந்த முறை முழு கதை வச்சிருக்கார்' என்று அனிருத் சொன்னார். உடனே, அவரை வரச் சொல்லி கதை கேட்டேன். அவர் சொன்ன முதல் கதை, 'தேவா' என்ற பெயரில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக இருந்தது. அந்த கதைக்கு நிறைய நடிகர்கள் தேவைப்பட்டதால், 'கூலி' என்ற வேறொரு கதையை உருவாக்கினார்," என்று ரஜினி தெரிவித்தார்.
நடிகர்களின் தேர்வு
சௌபின் ஷாகிர்: 'கூலி' படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, ஃபகத் ஃபாசிலை தேர்வு செய்திருந்தனர். ஆனால், அவர் பிசியாக இருந்ததால், சௌபின் ஷாகிரை லோகேஷ் அறிமுகப்படுத்தினார். "அவர் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் நடித்ததாகச் சொன்னார்கள். எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை. இருப்பினும், அவர் ஒரு சிறந்த நடிகர் என்று லோகேஷ் சொன்னதால், நானும் சரி என்று சொல்லிவிட்டேன்," என்று ரஜினி கூறினார்.
சத்யராஜ்
இன்னொரு கதாபாத்திரத்திற்கு, சத்யராஜை தேர்வு செய்திருந்ததாக லோகேஷ் சொன்னார். "அவரிடம் கேட்டீங்களா?" என்று ரஜினி கேட்க, லோகேஷ், "அவர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார், இருந்தாலும் ரஜினியிடம் கேளுங்க என்று சொன்னதாகக் கூறினார். 'சிவாஜி' படத்தில் எனக்குச் சரிசமமாகச் சம்பளம் தரேன் என்று சொல்லியும் அவர் நடிக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம்," என்று ரஜினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்ருதிஹாசன் ஒரு லேடி கேரக்டருக்கு, ஸ்ருதிஹாசனை தேர்வு செய்திருந்ததாக லோகேஷ் சொன்னார். "அவர் கிளாமர் நடிகை. இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பார் என்று கேட்டேன். அதற்கு, 'அவர் கமல் படத்தில் நடிப்பதைக் காட்டிலும், உங்கள் படத்தில் நடிக்கத்தான் ஆர்வமாக இருக்கிறார். ஏன்னா, கமல் டென்ஷனான ஆள், ரிலாக்ஸாக இருக்க முடியாது என்று சொன்னார்'," என்று ரஜினி கூறியது, அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கூலியின் பிரம்மாண்டம்
'கூலி' படத்தில், ரஜினி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கெமியோ ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், முன்பதிவிலேயே வசூலில் சாதனை படைத்து வருகிறது. ரஜினி பேசிய இந்த உணர்வுபூர்வமான விஷயங்கள், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
-
எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக் -
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications