Coolie Review: கூலியின் மொத்த கதையே இதுதான்! அந்த இடத்தில் தான் செம! ஆனால், செய்யாறு பாலு ஓபன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, முதல் நாள், முதல் காட்சி பார்த்த, மூத்த பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு, ஒரு விரிவான விமர்சனத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ளார்.

செய்யாறு பாலுவின் விமர்சனம்
கதைச் சுருக்கம்: "கதைப்படி, ரஜினி, பேச்சுலர்கள் தங்கும் 'மேன்ஷன்' ஒன்றை நடத்தி வருகிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்யராஜ், ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். இதனால், சத்யராஜின் மகளான ஸ்ருதி ஹாசன், தன் தந்தை மரணத்திற்கு காரணம் இவர்தான் என்று ரஜினியை வெறுக்கிறார். இந்த கொலைக்கு யார் காரணம்? நண்பனுக்கு இந்த மாதிரி நிலைமையை வரவழைத்தது யார்? இதற்குப் பின் யார் இருக்கிறார்? என்று, ரஜினி, தேட ஆரம்பிக்கிறார். அப்போது துறைமுகம் காட்டப்படுகிறது. அதை முழுவதும், தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நாகார்ஜுனா," என்று, செய்யாறு பாலு, கதையை விளக்கியுள்ளார்.
கதாபாத்திரங்கள்:
"நாகார்ஜுனாக்கு எதிராகச் செயல்படும் போலீஸ், அண்டர் கிரவுண்ட் ஏஜென்ட் என அனைவரையும், நாகார்ஜுனாவின் வலது கையாக இருந்து போட்டுத் தள்ளுகிறார் சௌபின் சாஹிர். அதிலும், ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் லோகேஷ்," என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். "கதை சாதாரணமாக இருந்தாலும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட், ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போல் இருந்தது. முதல் பாதி ஸ்லோவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில், அதிரடியாகச் செல்கிறது. அதிலும், கடைசி 20 நிமிடம், படம் வேற லெவல்," என்று, செய்யாறு பாலு, படத்தைப் பாராட்டியுள்ளார்.
அனிருத்தின் இசை:
"இந்த படத்தின் மற்றொரு ஹீரோ, அனிருத் தான். ஏனென்றால், அனைத்து கேரக்டர்களுக்கும், பக்காவாக பிஜிஎம் போட்டு, படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளார்," என்று, அனிருத்தின் இசையைப் புகழ்ந்துள்ளார். அதுபோல ரஜினிகாந்த் பற்றி பேசும்போது, "ரஜினிகாந்த் என்னும், 1950 மாடல் வண்டி, இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடும். ஆயிரம் கோடி வசூல் என்பதைத் தாண்டி, கண்டிப்பாக, இந்தப் படம், ரஜினி ரசிகர்களுக்கு, ஒரு சிறந்த 'ட்ரீட்'டாக இருக்கும்," என்று, செய்யாறு பாலு, நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
கூலி'யின் சுவாரஸ்யமான தகவல்கள்
'கூலி' திரைப்படம், ஆன்லைன் முன்பதிவில், ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தி, பல கோடிகளுக்கு டிக்கெட்டுகளை விற்றுள்ளது. உலகளவில், 'கூலி' படத்தின் முன்பதிவு டிக்கெட், ₹100 கோடியை நெருங்கி விட்டது. 'கூலி' திரைப்படத்தைப் பார்க்க, பல பிரபலங்கள், முண்டியடித்து வருகின்றனர். நடிகர் தனுஷ், அவரது மகனுடன், ரோகிணி திரையரங்கிற்கு வந்திருந்தார். அதே தியேட்டருக்கு ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவி யான ஐஸ்வர்யாவும் தனியாக வந்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ், அனிருத், சாண்டி மாஸ்டர், என, அடுத்தடுத்து பிரபலங்கள், படையெடுத்து வருகின்றனர். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'கூலி' திரைப்படத்தைப் பார்க்க, ரோகிணி திரையரங்கிற்கு வந்தபோது, "ரசிகர்கள், இத்தனை வருடங்களாக, அவருக்கு அளித்த அன்பையும், ஆதரவையும் பார்க்கும் பொழுது, நன்றி சொன்னால் போதாது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்," என்று, நெகிழ்ச்சியுடன் கூறினார்.
'கூலி' படத்தில், ரஜினியுடன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நித்யா ராம், சார்லி, ஜூனியர் எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் அமீர்கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'கூலி' திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது என்று, சமூக வலைத்தளங்களில், பலரும், பாசிட்டிவ் விமர்சனங்களை, பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications