மார்க்கபந்து... மாது, சீனு, மைதிலி, ஜானகி.. எல்லோரையும் அனாதையாக்கி விட்டார் கிரேஸி!
சென்னை: மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர் கிரேசி மோகன். இந்தியன் பார்த்தசாரதி... வசூல் ராஜா எம்பிபிஎஸ் மார்க்க பந்து இப்படி பலரை நம் முன்பு உலவவிட்டு தான் உலகை விட்டு பிரிந்து விட்டார் நம் கிரேசி.
மாது சீனு, ஜானகி, மைதிலி இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரம்மாவை கர்மா விட்டு வைக்கவில்லை.

கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வாழ்ந்தவர் கிரேசி மோகன். வீடு முழுக்க மனிதர்கள் என்று நிரம்பிய நிலையில்தான் தனிக் குடித்தனம் என்கிற கான்செப்ட் அவங்க வீட்டுக்குள் வந்தது. இதை அவரே நகைச்சுவையாக ஒரு முறை சொல்லி இருக்கார்.
மறக்க முடியாத தீபாவளி, அதோடு நகைச்சுவை தீபாவளின்னு எதாவது இருக்குமா என்று கேட்டபோது சிரித்துக் கொண்டே ஒரு நிகழ்வை சொன்னார்.
டிரவுசர் போட்டு இருந்த காலத்தில், தீபாவளிக்கு ராக்கெட் விட ஆசைப்பட்டேன். ஒரு பாட்டிலில் வச்சு விட்டேன். எதிர்த்தாப்ல மாடி மேல ஒரு டென்ட் கொட்டகை போட்டுக்கிட்டு மாமா ஒருத்தர் இருந்தார்.
நான் விட்ட ராக்கெட் அவர் வீட்டு கூரையில் விழுந்து தீ பத்திக்கிச்சு. நான் உள்ளே ஒடி வந்துட்டேன். ரொம்ப நாளா ராக்கெட் விட்டவன் எவனா இருக்கும்டான்னு என்னண்ட கேட்டுகிட்டே இருப்பார். நானும் பதில் சொல்லவே இல்லை.
இன்றைய வரைக்கும் தெரியாது. ஒரு வேளை இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டா உண்டுன்னு சொல்லி சிரித்தார். இயல்பான எளிமையான இந்த நகைச்சுவை கலைஞனின் எந்த நகைச்சுவையை சொல்வது, எதை விடுவது?
இவரது நாடகங்களில் வரும் மைதிலி, ஜானகி, சீனு, மாது கேரக்டர்கள் கிட்டத்தட்ட 2 தலைமுறைகளாக நம்முடன் வாழ்ந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் போலவே மாறி விட்டனர். அந்த அளவுக்கு மக்களிடையே பெரும் தாக்கததை ஏற்படுத்தியவை இந்த கேரக்டர்கள். அதன் முழுப் பெருமையும் கிரேசி மோகனுக்கே போய்ச் சேரும்.
நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான நகைச்சுவை எழுத்தாளர் இப்போது இல்லை... வயிறு குலுங்க சிரிக்க நூறு சதவிகிதம் உத்திரவாதம் தரும் நகைச்சுவை கலைஞன்,எழுத்தாளரை இழந்து விட்டோமே...
குடும்பத்தினர் அமைதி அடையட்டும்... உலகத் தமிழர்கள் வியந்து வியந்து ரசித்த கலைஞனின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications