Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Robo Shankar: ரோபோ சங்கர் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்! இருவருக்கும் இப்படி ஒரு நட்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் அகால மரணமடைந்தது, திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் மட்டுமல்லாமல், விளையாட்டு உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ரோபோ சங்கர் பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

Robo Shankar vijay tv Irfan Pathan

ஒரு கலைஞனின் இழப்பு

சின்னத்திரையில், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, பின்னர் வெள்ளித்திரையில் மாரி, விஸ்வாசம், வேலைக்காரன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரோபோ சங்கர். கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது 46வது வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்தது, அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஆறாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரரின் கண்ணீர் அஞ்சலி

ரோபோ சங்கரின் மறைவு குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "ரோபோ சங்கர் விரைவில் மறைந்து போனது அறிந்து மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இர்பான் பதானின் இந்த இரங்கல் பதிவு, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு ரசிகர், "ரோபோ சங்கரின் நடிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கமெண்டில் கேட்க, அதற்குப் பதிலளித்த இர்பான் பதான், "நாங்கள் ஒரு தமிழ் படத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். அவர் எப்போதும் மிகவும் பணிவானவர். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் அவரது முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது" என்று பதிலளித்துள்ளார்.

கோப்ரா படத்தில் கிடைத்த நட்பு

இர்பான் பதான் மற்றும் ரோபோ சங்கர் இருவரும், சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் இணைந்து நடித்தவர்கள். இந்தப்படத்தில்தான் இர்பான் பதான் ஒரு போலீஸ் அதிகாரியாகத் திரையுலகிற்கு அறிமுகமானார். கோப்ரா படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பைத்தான் இர்பான் பதான் தனது பதிவில் உருக்கமாக நினைவு கூர்ந்திருக்கிறார்.

சிரிப்பால் அனைவரையும் கட்டிப் போட்ட ஒரு கலைஞனின் இறப்பு, கலை, விளையாட்டு என எந்தத் துறை என்ற பாகுபாடின்றி, மனிதநேயத்தால் இணைந்த நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் இனி இந்த உலகில் இல்லை என்ற செய்தி, அவரது நண்பர்கள் அனைவருக்கும் பெரும் வலியைத் தந்து கொண்டிருக்கிறது.

முதல் முறை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட போது அவருடைய நிலைமை இனி அவ்வளவுதான் என்று பலர் சொல்லி வந்தனர். ஆனாலும் அவர் எல்லா விமர்சனங்களையும் தாண்டி மீண்டும் கெத்தாக வந்தார். இனி என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க வேண்டிய வெற்றிகள் பல இருக்கிறது, நான் மரணத்தையே பார்த்துவிட்டு வந்துவிட்டேன் என்று தைரியமாக இருந்த ரோபோ சங்கருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு ஏற்பட்டபோது கூட அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் இந்த உலகத்தை விட்டு இவ்வளவு சீக்கிரமாக போவார் என்று அவருடைய ரசிகர்களும், குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை. நேற்று முன்தினம் அவருடைய இறப்பு செய்தி அனைவருக்கும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக ரோபோ சங்கர் பற்றிய செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+