Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி கடை இசை விழா: தனுஷ் மேனேஜர் அதிரடி பேச்சு! சிவகார்த்திகேயனை குறிவைத்தாரா? இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் தனுஷ், தற்போது இட்லி கடை என்ற தனது நான்காவது திரைப்படத்தை இயக்கி, நடித்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Dhanush GV Prakash Sivakarthikeyan

பரபரப்பை கிளப்பிய மேனேஜர்

இந்த விழாவில், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசியதுதான், தற்போது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பேச்சில், "பிரபலமாக இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து உச்சத்துக்கு வருவது. இரண்டாவது, உச்சத்தில் இருப்பவர்களைத் தாக்கி மேலே வருவது" என்று ஸ்ரேயாஸ் தொடங்கினார்.

மேலும், "தனுஷை வைத்துப் பிரபலமானவர்கள், அவரால் வளர்ந்தவர்கள், அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர்களே அவரை எதிர்த்துச் செயல்படுவதை ஏற்க முடியாது. நேருக்கு நேர் மோதினால் பரவாயில்லை. ஆனால், ஒரு கணினிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் (தனுஷ்) பாலிவுட், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என எல்லா வுட்-களிலும் படம் செய்துவிட்டீர்கள். நீங்கள் நடித்தால் மட்டும் போதாது; பி.ஆர் (PR) செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்" என்று ஸ்ரேயாஸ் ஆவேசமாகப் பேசினார்.

"தலைவர் சொன்னது போல், நல்லவனா இருங்க, ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என்று ஸ்ரேயாஸ் தனது பேச்சை முடித்துக் கொண்டார். இந்த வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, தனுஷால் தயாரிக்கப்பட்ட எதிர்நீச்சல், காக்கிச் சட்டை போன்ற படங்களில் நடித்து, அதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த சிவகார்த்திகேயனைத்தான் ஸ்ரேயாஸ் மறைமுகமாகக் குறிவைத்துத் தாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் கொடுத்த வாழ்த்து

இந்த விழாவில், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் அருண் விஜய் உட்படப் பல பிரபலங்கள் கலந்துகொண்டு தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அருண் விஜய் பேசுகையில், "தனுஷ், ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல திறமைகளைக் கொண்டவர். சினிமாவுக்கான ஒரு ஆழமான பார்வை அவருக்கு உள்ளது. அவருடைய தொடர்ச்சியான உழைப்புதான் அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்துள்ளது" என்று புகழ்ந்து பேசினார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, "தனுஷின் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமையான கதை இருக்கும். இசையமைப்பாளராக அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இட்லி கடை இசை வெளியீட்டு விழா ஒருபுறம் பிரமாண்ட கொண்டாட்டமாக நடந்தாலும், இன்னொருபுறம் மேனேஜர் ஸ்ரேயாஸின் பேச்சு, திரைத்துறையில் நிலவி வரும் ரகசியப் போட்டிகளையும், மோதல்களையும் வெளிப்படையாகக் காட்டியுள்ளது. இந்த விவகாரம், வரும் நாட்களில் மேலும் பல விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+