கை விரலால்.. நெஞ்சுல கோலம் போட்டு.. மயிலிறகால் வருடி சிலிர்க்க வைத்த தர்ஷா
சென்னை: பால்வண்ண மேனியில் விதவிதமாக டாட்டூ போட்டு பட்டாம்பூச்சியை பறக்க விட்டதும் காணாது என்று அதில் காதோரத்தில் கவிதை பாடும் கூந்தலை மயிலிறகால் வருடி பார்ப்பவர்களுக்கு சிலிர்க்க வைத்த தர்ஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக இன்ஸ்டாகிராம் இயக்கி வருகிறது.
மாடர்ன் உடையில் லாக் டவுனை என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.. ரசிகர்களை நெளிய விட்ட பவித்ரா
உடலில் வெயில் படாத இடங்களில் டாட்டூவை போட்டு இதுவரைக்கும் காட்டாத இடங்களை எல்லாம் ரசிகர்களுக்கு காட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார்.
கழுத்தில் தெரியும் மச்சம்
கழுத்தில் தெரியும் மச்சத்தை பார்த்து ஏங்க வைக்கும் வகையில் கழுத்தை எடுப்பாய் தூக்கி காட்டி கழுத்தழகையும் நன்றாக ரசித்து கொள்ளும்படி விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். போட்டோவில் இவரை ரசிகர்கள் சூம் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வீடியோவையும் பார்த்து நன்றாக என்ஜாய் பண்ணி கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு தரிசனத்தை கட்டியிருக்கிறார்.
வீட்டிலேயே முடக்கம்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் லாக்டோன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நேரத்தில் டிவியை பார்த்தாவது நேரத்தை போக்கிக் கொள்ளலாம் என டிவி யை ஆன் செய்தால் அதில் கோராணா நியூஸ் போட்டு அனைவரையும் கதிகலங்க வைத்து வருகின்றனர் .அதில் பயந்து போயி டிவி ஆப் செய்துவிட்டு இணையதளத்தில் எதாவது பார்க்கலாம் என்றால் சமூக வலைத்தளங்களிலும் கொரோனா இறப்பு சம்பந்தமான நியூஸ்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .
இது என்னடா வாழ்க்கை
இந்நிலையில் மக்கள் என்னடா வாழ்க்கை என புலம்பிக் கொண்டிருக்கும் போது இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா விதவிதமாக மாடல் உடையில் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளுமையும் மனதுககு இதமாக பாட்டுப் பாடி ஆட்டம் போட்டு அசத்தியிருக்கிறார் . இவர் சீரியலில் நடித்து பிரபலமானதைவிடவும் பாவாடை தாவணியில் டிக்டாக்கில் தான் ரொம்பவும் பிரபலமாகிவிட்டார் .
மாடர்ன் உடையில்
கிராமத்து உடை என்று மட்டுமல்லாமல் மாடல் உடையிலும் டிக்டாக்கில் இவர் தன்னுடைய திறமையை வெளி காட்டி வந்ததால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது .தற்போது இவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் புது அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார் .தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் புண்பட்ட மனதிற்கு புகைப்படம் வெளியிட்டு ஆற்றி வருகிறார்.
கவிதை பாடும் ரசிகர்கள்
இவருடைய போஸ்ட் பார்த்து இவருடைய ரசிகர்களில் பலர் கவிஞர்களாக மாறிவிட்டனர் .பல ரசிகர்களை கவிஞர்களாக மாற்றிய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஒரு கவிஞர் கவிதைகளை பொழிந்து இருக்கிறார் அதில் அழகு நிலவு முகத்தில் களங்கம், அழகி இவள் முகம் நிலவு முகம், கலக்கம் ஏதும் இல்லா நிலவு முகம்.
உன்னை விடவா அழகு
வான் நிலவும் மேகத்துக்குள் சென்று மறைந்ததே பாவம் என்று இவள் வெள்ளி நிலவு முகம் கண்டு என்று கூறியிருக்கிறார் .ஆனால் இன்னொரு ரசிகர் உனக்காக ஒரு கவிதை ஆனால் அது உன்னை விட அழகு இல்ல டி என்று கொஞ்சி இருக்கிறார். என்ன சொல்லுங்க, தர்ஷா குப்தா எது செய்தாலும் அதை ரசிக்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே குத்த வைத்துக் காத்திருக்கிறது என்பது உண்மைதான்.