கரடு முரடாக இருந்தாலும் இத்தனை அன்பா? பிரிந்த மனைவிக்குத்தான் என் வீடு! மிஷ்கின் உருக்கம்
சென்னை: தான் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும், தான் சம்பாதித்த ஒரே சொத்தான தனது வீடு, மனைவிக்குத்தான் என்று இயக்குநர் மிஷ்கின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தனது மனைவியை இன்றும் பத்திரமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் விவரித்திருப்பதாவது:
"என் மனைவி ஏழ்மையானவர் என்பதால் என் நண்பர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் வந்து என்னிடம் காதல் சொன்னவுடன், 'அப்படியா அம்மா காதலிக்கிறீர்களா, வாம்மா' என்று உடனே சம்மதம் சொன்னேன். அது என் அம்மாவுக்குப் பிடிக்காததால், என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு 14 ஆண்டுகள் என் அம்மாவைப் பார்க்கவில்லை. என் முதல் படம் வெளியானதுக்குப் பிறகுதான் அவர்களைப் பார்த்தேன். நான் செய்ததுதான் சரி என்று என் மனதில் அவ்வளவு பெரிய ஆழமான நம்பிக்கை இருந்தது.
சொத்து என் வீடுதான்
இப்போது என் மனைவியுடன் நான் இல்லாமல் இருந்தாலும், நான் செய்ததுதான் சரி என்று நினைக்கிறேன். இன்றும் என் மனைவியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன், அன்போடு பார்த்துக்கொள்கிறேன். நான் சம்பாதித்த ஒரே சொத்து என் வீடு, அது என் மனைவிக்குத்தான்," என்று மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரிவுக்குக் காரணம் சினிமா மீதான காதல்
மேலும் மிஷ்கின் கூறுகையில், தான் மனைவியைப் பிரிவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்றார். "சினிமா மீது எனக்குத் தீராத காதல் இருந்ததால், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க முடியாமல் போனது. அதுவே நாளடைவில் எனக்கும் என் மனைவிக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி, இருவரும் பிரிய காரணமாக அமைந்துவிட்டது.
விவாகரத்து
நான் என் மனைவியிடம் ஒருமுறை, 'விவாகரத்து செய்து கொள்ளலாமா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான் கொடுக்க முடியாது' என்று சொல்லி மிகவும் அழுதுவிட்டார். அதிலிருந்து, நான் விவாகரத்தைக் கேட்கவில்லை. ஏனென்றால், எனக்கு நியாயம் புரிந்தது. அதனால், நாங்கள் இருவரும் தள்ளி நின்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் என் மகளை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் மகளிடம், 'அம்மாவை நீ பத்திரமாகப் பார்த்துக் கொள்' என்று சொல்லிவிட்டேன். இப்போது நான் சினிமாவைத் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மனைவி தேவையில்லை, எனக்கு சினிமா போதும்," என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
மிஷ்கின் திரைப்பயணம்
'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், 'அஞ்சாதே', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'துப்பறிவாளன்', 'பிசாசு', 'சைக்கோ' உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார். தற்போது 'பிசாசு 2' திரைப்படம் தயாராகி வருகிறது, இதில் நடிகை ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் தற்போது பல படங்களிலும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் 'மாவீரன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications