பட்டென போட்டு உடைச்சிட்டாரே இந்த பிரபலம்.. இரவில் நடிகைகளை காப்பாற்றுவதே கே.ஆர். விஜயாதான்.. நிஜமா?
சென்னை: பிரபல நடிகை கேஆர் விஜயா, அனைத்து முதலமைச்சர்களுடனும் இயல்பாகவும், உரிமையாகவும் பேசக்கூடியவர் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Kingwoods news என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஆர் விஜயா பற்றி தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.. அந்த காலத்திலேயே விமானம், கப்பல் என்று சொந்தமாக வைத்திருந்தது எப்படி? கேஆர் விஜயாவின் பின்புலம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இவை:

"கேரளாவை சேர்ந்தவர் கே.ஆர்.. இவரது அப்பா ஒரு ராணுவ வீரர்.. அங்கிருந்து திரும்பி நகைக்கடை வைத்து நஷ்டம் அடைகிறார்.. அதனால், பழனிக்கு வந்து சுற்றுலா கைடு பணியில் சேர்ந்துள்ளார். இதனால், குடும்பமே பழனியில் செட்டில் ஆக நேரிடுகிறது..
பள்ளிக்கூடத்தில் நாடகத்தில் ஆர்வத்துடன் நடித்த கேஆர் விஜயா, சோப்பு விளம்பரம், புடவை விளம்பரம், சாக்லேட் விளம்பரம் என மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்தது.
அதற்குபிறகு நாடகங்களிலும் நடித்தார்.. கேஆர் விஜயாவின் சொந்த பேரு தெய்வநாயகி.. இவரது அப்பா பெயர் ராமச்சந்திரன், அம்மா பெயர் கல்யாணி.. இந்த பெயர்களின் எழுத்துக்களை இணைத்து, கேஆர் விஜயா என்று பேர் வெச்சதே எம்ஆர் ராதாதான்.
ஊத்துக்குளி: ஊத்துக்குளியில் ஸ்டீல் சிவம் என்ற புகழ்வாய்ந்த போட்டோகிராபர் கண்ணில், கேஆர் விஜயா பட்டுவிட்டார். அப்போது 100 போட்டோக்களை எடுத்து, "சினிமாவில் கதாநாயகியை தேடுகிறவர்களுக்கு" என்று இந்த போட்டோக்களை பிரபலமாக்கினார்.
அப்படித்தான் "கற்பகம்" படத்தில் வாய்ப்பு வந்தது.. சிறந்த நடிப்பு, நல்ல அழகு, நேரம் தவறாமை, பயபக்தி போன்றவை அனைத்து விஷயங்களையும் கேஆர் விஜயாவிடமிருந்த கண்டு அனைவருமே ஆச்சரியப்பட்டனர். தன்னை சினிமாவில் நடிக்க அறிமுகப்படுத்திய ஸ்டில் சிவத்துக்கு, தன்னுடைய தங்கை ஹேமலதாவை திருமணம் செய்து வைத்தார் கேஆர் விஜயா.
தொழிலதிபர்: இவரை காதலித்து 2வது திருமணம் செய்தவர் வேலாயுத நாயர்.. இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். .. சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்தார்... இவர் ஸ்பென்சரின் டைரக்டர்.. 1980களிலேயே சுதர்சன் சிட்பண்டு என்று தென்னிந்தியா முழுக்க சிட்பண்டு பைனான்ஸ் நடத்தினார்.. எங்கப்பாவும் அந்த காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் இதில் இழந்தார்..
அந்த காலத்திலேயே பல கோடியை சுருட்டிட்டு கம்பெனியை மூடிட்டாரு வேலாயுத நாயர். அதேபோல, வேலாயுதம் நாயர் ஒரு தங்க கடத்தல்காரர். சிட்பண்டில் பல கோடி ரூபாய் லாபம் பார்த்தவர். அதுல வாங்கினதுதான், கப்பல், விமானம் எல்லாம்., முறைகேடாக வாங்கியவை..
அரசியல்வாதிகள்: தொழிலதிபர்கள், பெரிய பெரிய அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் பார்ட்டிகள் நடக்கும்.. அதில், கேஆர் விஜயாதான் சீப் கெஸ்ட்.. சுதர்சன் கம்பெனியின் ஒரு டைரக்டரும்கூட.. கேஆர் விஜயாவை வைத்து பல கோடி சம்பாதித்தார் வேலாயுத நாயர். எனவே தன்னுடைய கணவனின் கௌரவம், தன்னுடைய கௌரவம் கருதி, 2வது திருமணம் செய்தார். தனக்கான பாதுகாப்பும் தேவையாக இருந்தது.
ஆனால் எப்படி பார்த்தாலும், வேலாயுதத்தை திருமணம் செய்தது, கேஆர் விஜயாவுக்கு சரிவுதான். கருணாநிதி, எம்ஜிஆர்., ஜெயலலிதா என எல்லா முதலமைச்சர்களுடன் நேரடியாக பேசக்கூடியவர்கள் மனோரமாவும், கேஆர் விஜயாவும் மட்டும்தான்.
நடிகைகள்: பல நடிகைகளை காப்பாற்றியதே இவர்கள் 2 பேரும்தான்.. இரவுகளில், தொழிலதிபர்களுடன் நடிகைகள் ஈசிஆர், ஓட்டல்களில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டால், அவர்களை காப்பாற்றுவதே இவர்கள்தான்.. அப்போதைய முதலமைச்சர் யார் இருக்கிறார்களோ, அவர்களே நேரடியாகவே பேசி விடுவிப்பவர்கள் இவர்கள் 2 பேரும்தான்" என்றெல்லாம் பேசியிருக்கிறார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications