அந்த டாப் ஹீரோவை பற்றி நடிகை புஷ்பலதா சொன்னதுமே.. கட்டையை கையிலெடுத்த விறகுக்கடைக்காரர்.. பிரபலம் அட
சென்னை: பழம்பெரும் மூத்த நடிகை புஷ்பலதா திரைத்துறைக்கு வந்தது குறித்தும், சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது, "பிரபல நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா.. அற்புதமான நடிகை... இவரை பற்றி சொல்வதானால், ஒரு துயரத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. புஷ்பலதா திருப்பூரை சேர்ந்தவர். சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தார்..

ஆனால், அப்போதைய ஒரு உச்சபட்ச நடிகர், அவரை சினிமாவில் நடிக்க அனுப்பாமல், தனக்கு சின்ன வீடாகவே அவரை வைத்திருந்தார். சினிமா ஸ்டுடியோ அவரை விடுவதில்லை. இதனால் அவரை மீறி செல்லவும் பயந்து கிடந்தார் புஷ்பலதா.
ரயில்வே கேட்: அப்போதெல்லாம் கோடம்பாக்கம் மேம்பாலம் இல்லாத சமயத்தில், வெறும் ரயில்வே கேட் மட்டும்தான் அப்போது போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வண்டிகள் எல்லாம் ரயில்வே கேட்டில் நின்றுதான் செல்லும்.. இந்த ரயில்வே கேட்டை சுற்றிலும் ஏராளமான விறகுக்கடைகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் கேஸ் ஸ்டவ் இல்லாததால், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன.
அந்தவகையில், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், ஒரு விறகுக்கடைக்காரரிடம், தன்னுடைய நிலைமையை சொல்லி புஷ்பலதா அழுதார்.. உச்சபட்ச நடிகர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பதாகவும், சினிமாவில் நடிக்க அனுமதி தராமல் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் கூறி கதறினார்.
கிறிஸ்தவ பின்னணி: உடனே அந்த விறகுக்கடைக்காரர் புஷ்பலதாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.. ஒருநாள், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், அந்த உச்சபட்ச நடிகரின் கார் வந்து நிற்கிறது. உடனே அந்த விறகு கடைக்காரர், நீண்ட விறகுக்கட்டையை கொண்டு போய், அந்த நடிகரின் கார் கண்ணாடியை அடித்து உடைக்கிறார். வாய்ப்பு தேடி வந்த பெண்ணை சினிமாவில் நடிக்க விடாமல், சின்ன வீடாக பயன்படுத்துகிறாயா? என்று கேட்டு, அவரது காரை நொறுக்குகிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த நடிகர் புஷ்பலதாவை தொந்தரவு செய்யவில்லை. அதற்கு பிறகுதான் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாகவும் புஷ்பலதா வர்றாங்க. இயல்பாகவே கிறிஸ்தவ பின்னணியை சேர்ந்தவர் என்பதால், கணவனுடன் இணைந்து, கிறிஸ்தவ பணிகளை மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications