அந்த டாப் ஹீரோவை பற்றி நடிகை புஷ்பலதா சொன்னதுமே.. கட்டையை கையிலெடுத்த விறகுக்கடைக்காரர்.. பிரபலம் அட
சென்னை: பழம்பெரும் மூத்த நடிகை புஷ்பலதா திரைத்துறைக்கு வந்தது குறித்தும், சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது, "பிரபல நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா.. அற்புதமான நடிகை... இவரை பற்றி சொல்வதானால், ஒரு துயரத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. புஷ்பலதா திருப்பூரை சேர்ந்தவர். சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தார்..

ஆனால், அப்போதைய ஒரு உச்சபட்ச நடிகர், அவரை சினிமாவில் நடிக்க அனுப்பாமல், தனக்கு சின்ன வீடாகவே அவரை வைத்திருந்தார். சினிமா ஸ்டுடியோ அவரை விடுவதில்லை. இதனால் அவரை மீறி செல்லவும் பயந்து கிடந்தார் புஷ்பலதா.
ரயில்வே கேட்: அப்போதெல்லாம் கோடம்பாக்கம் மேம்பாலம் இல்லாத சமயத்தில், வெறும் ரயில்வே கேட் மட்டும்தான் அப்போது போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வண்டிகள் எல்லாம் ரயில்வே கேட்டில் நின்றுதான் செல்லும்.. இந்த ரயில்வே கேட்டை சுற்றிலும் ஏராளமான விறகுக்கடைகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் கேஸ் ஸ்டவ் இல்லாததால், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன.
அந்தவகையில், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், ஒரு விறகுக்கடைக்காரரிடம், தன்னுடைய நிலைமையை சொல்லி புஷ்பலதா அழுதார்.. உச்சபட்ச நடிகர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பதாகவும், சினிமாவில் நடிக்க அனுமதி தராமல் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் கூறி கதறினார்.
கிறிஸ்தவ பின்னணி: உடனே அந்த விறகுக்கடைக்காரர் புஷ்பலதாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.. ஒருநாள், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், அந்த உச்சபட்ச நடிகரின் கார் வந்து நிற்கிறது. உடனே அந்த விறகு கடைக்காரர், நீண்ட விறகுக்கட்டையை கொண்டு போய், அந்த நடிகரின் கார் கண்ணாடியை அடித்து உடைக்கிறார். வாய்ப்பு தேடி வந்த பெண்ணை சினிமாவில் நடிக்க விடாமல், சின்ன வீடாக பயன்படுத்துகிறாயா? என்று கேட்டு, அவரது காரை நொறுக்குகிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த நடிகர் புஷ்பலதாவை தொந்தரவு செய்யவில்லை. அதற்கு பிறகுதான் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாகவும் புஷ்பலதா வர்றாங்க. இயல்பாகவே கிறிஸ்தவ பின்னணியை சேர்ந்தவர் என்பதால், கணவனுடன் இணைந்து, கிறிஸ்தவ பணிகளை மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications