Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவது யார்? அவங்கலாம் எப்போ? 84 நாட்களுக்கு இத்தனை லட்சமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவண விக்ரமுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சி விருவிருப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேங் கேங்காக விளையாடி வருவதாக விமர்சனங்கள் உள்ளன.

Do you know how much Salary taken by Saravana Vikram?

இதில் மாயா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா, அர்ச்சனா , விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஜோவிகாவும் பிரதீப் ஆண்டனியும் எவிக்ட் ஆகிவிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி தற்போது 85 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த விளையாட்டில் முதலில் 23 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டனர். பாவா செல்லததுரை அவராகவே போட்டியிலிருந்து விலகி விட்டார். அது போல் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆன்டணி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் 84 ஆவது நாளான இன்று யார் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகிய மூன்று பேர் நாமினேஷனில் உள்ளது. இவர்கள் விக்ரம்தான் வெளியேறுவார் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நம்பப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற போவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதற்காக அவருக்கு ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ஊதியம் பேசப்பட்டது. அவருக்கு 14. 94 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இவருக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, நிக்ஸன், மாயா, மணிசந்திரா, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இந்த வீட்டில் வாரந்தோறும் சில போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளுக்கேற்ப வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் யார் கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சி 106 ஆவது முடிவடையும். அதுவரை போட்டியாளர்களுக்கு நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு. பொங்கல் உள்ளிட்டவை இங்குதான் கொண்டாடுவார்கள். இந்த போட்டியிலிருந்து கூல் சுரேஷ் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் யார் கடைசி வரை இருப்பார்கள் என தெரியவில்லை.

நிக்ஸன், பூர்ணிமா, மாயா ஆகியோர் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என நெட்டிசன்கள் கேட்கிறார்கள். இவர்களைத்தான் புல்லியிங் கேங் என விமர்சிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+