பார் செட்டப்புடன் கட்டிய வீட்டை இடித்துவிட்டு மீண்டும் கட்டிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை.. ஏன்?
சென்னை: கண்ணான கண்ணே சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் புதிதாக கட்டிய வீட்டை இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளார். இதற்கான நெகிழ்ச்சியான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்திவாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் பிரியா பிரின்ஸ் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் என் பெயர் மீனாட்சி, தவணை முறை வாழ்க்கை, தமிழ் கடவுள் முருகன், மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2.0 மற்றும் நடுவன் ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.
இவருக்கு 33 வயதாகிறது. எனினும் இவர் சீரியல்களில் அம்மா வேடம், வில்லி வேடங்களிலும் பணக்கார பெண் வேடங்களிலும் நடித்து வருகிறார். எத்தனை சீரியல்களிலும் படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக நடித்ததுதான் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது இலக்கியா, ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்களில் தன்னுடைய வில்லி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பிரியா பிரின்ஸ் அண்மையில் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வந்தார். இந்த வீட்டில் பார் செட்டப்புடன் கட்டியிருந்தார். இதுகுறித்து அவரே யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.
இந்த வீட்டில் ஒரு சிறு பகுதியை இடித்துவிட்டு பிரியா பிரின்ஸ் மீண்டும் கட்டியுள்ளார். வீட்டு சமையலறை ஓபன் கிச்சனாக இருக்க வேண்டும் என்பது பிரியா பிரின்ஸின் தாயின் விருப்பமாம். ஆனால் இது வேறு மாதிரி இருந்ததால் தனது தாயின் ஆசைக்காக அந்த பகுதியை மட்டும் இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளார். இதற்காக அவர் பல லட்சங்களை செலவிட்டும் உள்ளார்.

அவருடைய ஹோம் டூர் வீடியோவையும் அவரது சேனலில் வெளியிட்டிருந்தார். கதவு எண் ஏ1 என போடப்பட்டுள்ள அந்த வீட்டின் வாசலில் சிறிய அளவிலான சாய்பாபா அமர்ந்திருக்கிறார். கோயிலில் உள்ளது போல் விளக்கு இருக்கிறது. கிரகபிரவேசத்திற்கு அனைவரையும் விளக்கு ஏற்ற வைத்துவிட்டோம் என்றார்.
வீட்டில் பர்னிச்சர்களை விலைக்கு வாங்காமல் செய்துள்ளார். ஹாலில் ஒரு ஆன்டிக் போன் வைத்துள்ளார். எதுவுமே அவருடைய உயரத்தில் இருந்தால்தான் தனக்கு பிடிக்கும் என கூறுகிறார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications