யாரு ராதாரவியா? அவர் நல்லவரா? என் ஆடைக்குள் கையை விட்டு அசிங்கப்படுத்தி! குமுறும் டப்பிங் ஆர்டிஸ்ட்
சென்னை: சினிமாவில் டப்பிங் பேசும் கலைஞர்களிடம், டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் தவறாக நடந்தால் அதை தட்டி கேட்கும் அளவுக்கு ராதாரவி நல்லவரா என டப்பிங் கலைஞர் சங்கீதா தனது மனக்குமுறலை தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை அசிங்கமாக பேசிய ராதாரவி எப்படி மற்ற பெண்களுக்கு எதிரான அநியாயங்களை தட்டி கேட்பார் என அந்த பெண் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து டப்பிங் கலைஞர் சங்கீதா கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2017 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவரால் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ஏற்பட்டது. இதுகுறித்து டப்பிங் யூனியன் செயலாளரிடம் புகார் தெரிவித்தேன்.
டப்பிங்கிற்கு அழைக்க மாட்டேன்: ஆனால் அவரோ எனக்கு போன் செய்து "சங்கீதா நான் அந்த நபரிடம் பேசிவிட்டேன். இனி அவர் உங்களை டப்பிங்கிற்கு அழைக்க மாட்டார், நீங்களும் போகாதீர்கள்" என்றார். நான் என்ன சார், நான் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி ஒரு தீர்வை தருகிறீர்களே என்றேன். அதற்கு அவர் "நீங்கள் சட்ட ரீதியிலாக சென்றால் நான் உங்களை யூனியனில் இருந்து நீக்கிவிடுவேன்" என மிரட்டினார்.
பிறகு டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட சின்மயி உள்ளிட்டோர் இருந்த குழு சார்பில் நான் ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது டப்பிங் யூனியனில் ஒரு மீட்டிங் நடந்தது. அதற்கு நான் சென்றேன். அப்போது ராதாரவி, " அந்த பெண்ணை (என்னை) அடிங்க" என சொன்னார்.
டப்பிங் யூனியன் செயலாளரின் தங்கை : உடனே அந்த டப்பிங் யூனியன் செயலாளரின் தங்கை கவிதா, என்னை அசிங்கமாக பேசி, என் ஆடைக்குள் கையை விட்டு நகங்களால் கீறி என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். நான் எழுந்திருக்காமல் இருக்க சில பெண்கள் என்னை அப்படியே அழுத்தி பிடித்துக் கொண்டனர். உடனே நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் அட்மிட் ஆக சொல்லி போலீஸிலும் தகவல் சொன்னதால் இது கேஸ் ஆனது. கவிதா செய்தது எல்லாமே ராதாரவி சொல்லித்தான்.

8 பேர் மீது வழக்கு: நான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். அப்போது ராதாரவி, யூனியன் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
ராதாரவி நல்லவரா: அப்படியும் என் கேஸ் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் கேஸையே முடித்துவிட்டார்கள். ராதாரவிக்கு இருக்கும் பணபலம், ஆள்பலம் எல்லாருக்கும் தெரியும். அவர் தலையீட்டால் இப்படி கேஸை க்ளோஸ் செய்திருக்கலாம். செயலாளர் கதிரவனும் பெண்களிடம் அசிங்கமாகவே பேசுவார். இதை ராதாரவி தட்டி கேட்க மாட்டார். ஏனென்றால் அவரே நல்லவர் கிடையாது. யூடியூபில் இதுவரை எந்த பெண்ணையாவது நன்றாக பேசியுள்ளாரா, நயன்தாராவை அவர் என்ன பேசினார், அவரை எதற்காக திமுகவிலிருந்து நீக்கினார்கள். எனவே அவரே நல்லவர் இல்லாத போது அவர் எப்படி அநியாயத்தை தட்டி கேட்பார். டப்பிங் யூனியன் தேர்தலில் கள்ள ஓட்டுக்களை போட்டு ராதாரவி அணியே எப்போதும் வெல்லும். இவ்வாறு டப்பிங் கலைஞர் சங்கீதா தனக்கு நடந்த அநியாயங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications