விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்.. அதுவும் அந்த டாப் சீரியலும் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் இரண்டு சீரியல்கள் தற்போது அடுத்தடுத்து முடிவுக்கு வர இருக்கிறது.

அந்த வகையில் இரண்டு சீரியல்களின் கடைசி நாள் சூட்டிங் முடிவடைந்து இருப்பதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி எந்தெந்த சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

 ending thendral vanthu ennai thodum and pandian stores serial in vijay tv

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இப்போது அதைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில சீரியல்கள் அதிரடியாக நேர மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது இதில் எதிர்பாக்காத வகையில் தற்போது இந்த வாரத்திற்கு அண்ணன் பிரமோவும் வெளியாகி இருக்கிறது.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடந்த வாரம் ராதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதை பார்த்த வெற்றி, ராதாவை கொலை செய்தது பரமு தான் என்று நினைத்துக் கொண்டிருக்க, அதே நேரத்தில் பரமு, ராதாவை கொலை செய்த விட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசியில் ராதாவை கொலை செய்தது கண்மணி தான் என்பது இன்றைய ப்ரமோவில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பரமுவாக நடிக்கும் நடிகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுடுவது போன்று போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கூடவே அதற்கு கீழே தென்றல் வந்து என்னை தொடும் முடிவடைந்தது சென்னையில் என்பது போன்று குறிப்புகளும் வெளியிட்டிருக்கிறார். இதனால் இவர் நடித்து வரும் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் இந்த சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்பே தாலி சென்டிமென்டால் பெரும் சர்ச்சையோடு தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இப்போது முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே வெற்றிக்கு தன்னுடைய குழந்தையை பற்றி தெரிய வந்துவிட்டது. ஆனால் வெற்றிக்கு உண்மை தெரியும் என்பது மட்டும்தான் அபிக்கு தெரியவில்லை. இந்த நிலையில் இனி கடைசியில் அதையும் தெரிய வைத்ததும் வெற்றி வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளுக்கு காரணம் கண்மணி தான் என்பதும் தெரிய வந்ததும் சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.

ஆனாலும் இன்னும் ஒரு சில எபிசோடுகளுக்கான சூட்டிங் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இப்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் அதைத் தொடர்ந்து முடிவுக்கு வர இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+