குணசேகரனை வெளியே துரத்தும் ஜனனி.. எதிர்த்து பேசும் ஈஸ்வரி.. எதிர்பார்க்காத பரபரப்பான தருணம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தாவை பார்ப்பதற்காக வந்த குணசேகரனை ஜனனி வெளியே துரத்துகிறார்.
ஜனனிக்கு ஆதரவாக ஈஸ்வரி குணசேகரனை கேள்வி கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் செய்தியலில் இத்தனை நாட்களாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கதை வேறு விதமாக போய்க்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வந்திருந்தனர். காரணம் ஆதிரையின் காதலும் அதற்கு பிறகு வந்த பிரச்சனைகளும் பலருக்கும் வேதனையாக மாறிவிட்டது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் தற்போது மீண்டும் நடந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் அடிமைத்தனத்துக்கு எதிராக பேச வேண்டும் என்றும், தங்களுடைய முடிவுகளாலும் தைரியத்தாலும் பல பெண்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது.
ஆதிரையின் திருமணத்தை வைத்து குணசேகரன் அப்பதாவிடம் இருந்து 40 பிரசண்டேஜ் ஷேரை ஏமாற்றி வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அப்பத்தா கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் இனி சொத்து உங்களுக்கு 40 பிரசண்டேஜ் கிடைக்காது என்று ஜனனி நேற்று எபிசோட்டில் சொன்னதை கேட்டு குணசேகரன் உளறி, ஜனனி சொன்னதை நினைத்து புலம்பியதையும் பார்த்த ரசிகர்கள் வாய்விட்டு சிரித்ததாக கூறி இருக்கிறார்கள்.
பொதுவாக வில்லன்கள் செய்யும் செயல்களை பார்த்து ரசிகர்கள் திட்டதான் செய்வார்கள். ஆனால் குணசேகரன் செய்யும் செயலை பார்த்து தான் பலரும் சிரித்துக் கொண்டும் இருக்கின்றனர். என்னதான் இவரை திட்டினாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி கேட்ட கேள்விகளால் பயந்து போன குணசேகரன் இன்று அப்பத்தாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். மருத்துவமனைக்கு வந்த குணசேகரனை ஜனனி உள்ளே போகக்கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். அதற்கு போக கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருமா என்று கேள்வி கேட்ட குணசேகரன், சக்தி என்னடா இது கூட்டிட்டு போ அந்த பக்கம் என்று கூறுகிறார்.
அப்போது ஈஸ்வரி இனிமே உங்களுக்கு எதிராக யாரும் வர முடியாது அப்படின்னு ஒரு நம்பிக்கையோடு வாழ ஆரம்பிச்சிட்டீங்க இல்ல என்று குணசேகரனை பார்த்து கேள்வி கேட்க தற்போது இந்த பிரமோ பரபரப்பாக வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமானோர் பாராட்டி வருகின்றனர். ஈஸ்வரி இனி இதே போல கேள்வி கேட்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. தற்போது இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுகான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications