தர்ஷினி மற்றும் கதிர் கொடுத்த டுவிஸ்ட்.. இனி குணசேகரன் நிலைமை அவ்வளவுதானா? அதிரடியாக மாறிய கதை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 21 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் குணசேகரனிடம் தர்ஷினி தான் காதலிக்கும் விஷயத்தை சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் தர்ஷினியை தொடர்ந்து கரிகாலன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கதை வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் குணசேகரன் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜெயித்துக்கொண்டே இருந்த நிலையில் இது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி இருந்தது. இதை தொடர்ந்து இப்போது வீட்டு பெண்களும் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து தைரியமாக எலக்ஷனில் நிற்கிறார்.
அதுபோல கட்டாய திருமண வாழ்க்கையில் குணசேகரனால் மாட்டியிருந்த ஆதிரையும் தாலியை கழட்டி வீசிவிட்டு தான் காதலித்த அருண் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதோடு குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிமார்கள் மீது ஆதிரை இனி கேஸ் போட இருக்கிறார். அதுபோல ஆதிரைக்கு இனி அருனோடு திருமணம் நடக்கும் என்று சாருபாலா கூறி இருக்கிறார்.
அப்பத்தா நிலைமை என்ன ஆனது என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது வீட்டுப் பெண்கள் எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரிகாலன் உடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு பதிலாக இனி தர்ஷினியை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று குணசேகரன் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க எடுத்த முயற்சியில் பட்ட அவமானங்களும் பிரச்சனையும் மறந்து போய்விட்டது போல. அதனால் மீண்டும் அதே செயலை செய்ய குணசேகரன் துணிந்திருக்கும் நிலையில் அதற்கு ஈஸ்வரி அட்வைஸ் செய்து பார்த்தாலும் அடங்காத குணசேகரனுக்கு தர்ஷினி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதாவது ஒரு பையன் வீட்டிற்கு வரவைத்து இவனை தான் நான் காதலிக்கிறேன் என்று மொத்த குடும்பத்தின் முன்பும் தர்ஷினி சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். நேற்று வரைக்கும் தர்ஷினி தனக்கு விரைவில் டொனமென்ட் வரப்போகிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு ஈஸ்வரி உனக்கு என்ன சப்போர்ட் தேவையோ அதை நான் பண்ணுகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் கடைசியில் ஒரு பையனை கூட்டி வந்து அவர்தான் என்னுடைய காதலன் என்று மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஆதிரை கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத குணசேகரனுக்கு இப்போது தர்ஷினி கொடுத்த அதிர்ச்சி பெரியதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இனி கதிரும் அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏற்கனவே இதுவரைக்கும் நந்தினி மீது கோபத்தையே காட்டிக் கொண்டிருக்கும் கதிர் இப்போது நந்தினியை புரிந்து கொண்டு கண்கலங்கி இருக்கிறார்.இந்த நிலையில் இனி தன்னுடைய மனைவிதான் தனக்கு என்று சொல்லும் காலம் வெகு சீக்கிரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.
தன்னுடைய வேட்டை நாயாக கதிரை பயன்படுத்தி வந்த குணசேகரன் இனி கதிர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை அவமானப்படுத்த, அப்போது தனக்கு துணையாக இருக்கும் நந்தினியால் கதிர் அதிரடியாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்போது எதிர்நீச்சல் பயணிக்க தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications