எதிர்நீச்சல்: கண் முழித்த அப்பத்தா.. அவமானப்படுத்தும் ஆதிரை.. குணசேகரனுக்கு இந்த நிலைமையா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த புடவையை கட்டிக்கொண்டு வா என்று ஆதிரை ஜான்சி ராணி மிரட்டுகிறார்.
அதற்கு எனக்கு புடிக்கல என்று ஆதிரை முகத்தடி கொடுக்க குணசேகரன் சந்தேகப்படுகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த தருணங்கள் இப்போது ஒவ்வொன்றாக நடக்க தொடங்கி இருக்கிறது. இத்தனை நாட்களும் ஆதிரை திருமணத்தை வைத்து பல மாதங்களாக கதை இழுத்துக் கொண்டிருக்கிறதே என்று ரசிகர்கள் பீல் பண்ணி இருந்த நிலையில் இப்போது ஜீவானந்தம் என்ட்ரியால் கதை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்து நான் ஜீவானந்தம் இடம் பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஜனனி ஜீவானந்தத்திற்கு போன் போட்டு கொடுக்கிறார். ஆனால் ஜீவானந்தம் போனை எடுக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் ஜனனி படித்த பொண்ணு என்பதால் அடுத்த கட்டத்தை சீக்கிரமா மூவ் பண்ணி போயிட்டு இருக்காங்க.
பட்டம்மாள் நமக்கு எழுதி தந்திருப்பது போதாது மீதி இருக்கும் சொத்துக்களையும் நாம வாங்கணும் அதுக்கு அவங்களோட கைரேகை வேணும். அதுக்கு ரெடி பண்ணுங்க என்று ஜீவானந்தம் கூறுகிறார். இந்த நிலையில் ஆதிரை திருமணத்திற்கான ஏற்பாடுகளை குணசேகரன் வேக வேகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரனும் அப்பத்தா கைரேகையை எடுத்து விட வேண்டும் என்று ஆடிட்டர் மூலமாக முயற்சி செய்கிறார். இந்த நிலையில் இன்றைய பிரமோவில் மண்டபத்திற்கு ஜனனி, ஆதிரை ஈஸ்வரி என எல்லோரும் வந்து இருக்கும் நிலையில் ஆதிரையிடம் ஜான்சி ராணி இந்த புடவையை கொண்டு போய் வேகமாக மாத்திட்டு வந்து என் புள்ள பக்கத்துல நில்லு என்று சொன்னார்.
எனக்கு இது பிடிக்கல என்று ஆதிரை அனைவரும் முன்னாடியும் சொல்ல, இந்த புடவை மட்டும் தான் உனக்கு புடிக்கலையா? இல்ல என் பிள்ளையையும் பிடிக்கலையா? என்று ஜான்சி ராணி கேள்வி கேட்கிறார். அதை நேரத்தில் வீட்டில் உள்ள மருமகள்களில் நடவடிக்கை சரியில்லை .ஏதோ நமக்கு எதிரா ப்ளான் போட்டுக்கிட்டு இருக்காங்க என்று குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications