ஜனனி கூறிய மோட்டிவேஷன்.. கட்சி மாறிய ஜான்சி ராணி..குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்..அடுத்த பிரச்சனை ரெடி
ஈஸ்வரி தன்னால் முடியுமா என திணறி இருக்கும் நேரத்தில் ஜனனி அவருக்கு அறிவுரை கொடுத்து தைரியம் கொடுக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணத்திற்கு குணசேகரனோடு வீட்டு பெண்கள் டிரஸ் எடுக்க வந்திருக்கின்றனர்.
ஜவுளி கடையில் குணசேகரனுக்கு அடுத்தடுத்த அவமானங்கள் கிடைக்கிறது.
ஜான்சி ராணி தன்னை குணசேகரன் ஏமாற்றியதை தெரிந்து கொண்டு குணசேகரனுக்கு எதிராக செயல்பட இருக்கிறார்.

குழப்பும் குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்பார்க்காத வகையில் ஆதிரைக்கு அவருக்கு பிடித்த அருணுடன் திருமணத்தை செய்து வைக்க சம்மதித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத குடும்பத்தினர் குணசேகரனின் மீது சந்தேகத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் அப்பத்தாவுடைய 40% ஷேர் எனக்கு கிடைத்தால் தான் நான் ஆதிரையின் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று குணசேகரனும் சொன்னதால் அப்பத்தாவும் குணசேகரனின் கண்டிஷனுக்கு சரி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் குணசேகரன் வீட்டிற்கு தெரியாமல் ஜான்சிராணி இடம் ஆதிரையை கரிகாலனுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என்று வீடியோ மூலமாக உறுதி கொடுத்திருக்கிறார்.

ஈஸ்வரிக்கு கிடைத்த தைரியம்
இந்த நிலையில் ஈஸ்வரிக்கு காலில் அடிபட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரிக்கு தர்ஷன் படிக்கும் காலேஜில் வேலை கிடைத்திருக்கிறது. அதற்காக வீட்டில் சொல்லாமல் இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரி தர்ஷன் காலேஜுக்கு சென்று இருக்கிறார். அந்த இடத்தில் இருந்து கொண்டு ஈஸ்வரிக்கு பதட்டம் ஏற்படவே ஜனனிக்கு போன் பண்ணி பேச, ஜனனி, பயந்து ஓடி வந்திட்டா திரும்ப நாலு செவத்துக்குள்ள முட்டிக்கிட்டு தான் நிக்கணும். என்ன செய்யணும் நீங்களே முடிவு எடுத்துக்கோங்க! என்று மோட்டிவேஷன் கொடுக்க, பயந்து கொண்டு இருக்கும் ஈஸ்வரிக்கு தைரியமாக மாறுகிறார்.

ஏமாத்திய ஜான்சி ராணி
ஏற்கனவே ஜனனிக்கு புதியதாக கம்பெனி கிடைத்திருக்கிறது. அந்த கம்பெனிக்கு பணம் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி யாரிடமும் பேசிக்கொள்ளாமல் ஜனனி ஆதிரை திருமணத்திற்காக புடவை எடுப்பதற்கு குணசேகரனோடு ஜவுளி கடைக்கு வந்து இருக்கிறார். ஏற்கனவே ஜவுளி கடைக்கு நாங்கள் வருகிறோம் என்று ஜான்சி ராணிக்கு போன் செய்த குணசேகரன் நான் சொன்ன பிறகு, கடைக்கு வந்தால் சரி என்று கூறியிருந்தார். அதற்கு முன்பே காத்துக் இருந்த ஜான்சி ராணி இடம் குணசேகரன் அப்படி இப்படி என்று ஜான்சி ராணியை அலையவிட்டு இருக்கிறார்.

குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்
குணசேகரனின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட ஜான்சி ராணி என்னை தெரு தெருவா சுத்த விட்டுடான்ல, இனி ஜான்சி ராணி யார் என்று குணசேகரனுக்கு காட்டுகிறேன் என்று கடும் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஆதிரை எனக்கு கல்யாண புடவை ஜனனி அண்ணியே செலட் செய்யட்டும் என்று ஆதிரை சொல்ல, உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா எஸ்கேஆர் வீட்டில் ஜனனியை தத்து எடுத்துட்டாங்க என்று குணசேகரன் சிரித்தபடியே சொல்ல, அதற்கு அரசு ஜனனிக்கு எங்க வீட்டில் உள்ள குணம் இருக்கு. தத்து எடுத்தா கூட தப்பு இல்லை என்று சொல்ல, குணசேகரனின் முகம் மாறுகிறது. தற்போது இந்த பிரமோ இன்றைய எபிசோடு காண ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications