பிளானை வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்த அப்பத்தா.. திணறும் குணசேகரன்.. அதிர்ச்சி கொடுத்த சக்தி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆதிரையின் திருமண வரதட்சணையாக மொத்த ஷேரில் தங்களுக்கு 5% வேண்டும் என்று எஸ் கே ஆர் தம்பி டீல் பேசுகிறார்.
அனைவருடைய செயலைப் பார்த்து கோபத்தில் சக்தி புது முடிவு எடுக்கிறார்.

வீட்டிற்கு வந்த அரசு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரையின் நிச்சயதார்த்த விஷயங்களை பற்றி பேசுவதற்காக எஸ் கே ஆர் தம்பி குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

என்ன கேட்க போகிறார்
எஸ் கே ஆர் தம்பி அரசுவிடம் விசாலாட்சி அம்மா, உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று நீங்கள் கேளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அரசு அதைக் கேட்டு முடிவு பண்ணுவதற்காக தான் இங்கே வந்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் நினைத்தபடி நிச்சயதார்த்த வேலைகளை பற்றி நான் எதுவும் கேட்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

சொத்து வேணுமாம்
அதற்கு குணசேகரன் வேற என்ன வேண்டும் என்று கேட்கிறார். அப்போது அரசு மொத்த சொத்தில் ஐந்து பங்கு உள்ளது. அதில் ஆதிரைக்கு ஒரு பங்கு வேண்டும் என்று கேட்கிறார். இதை எதிர்பார்க்காத குணசேகரன் ரொம்பவும் டென்ஷன் ஆகிறார்.. என்ன பேசுறோம் என்று யோசித்து பேசுங்க அரசு என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து எஸ் கே ஆர் தம்பி அருள் எங்க அண்ணன் கேட்டது சரிதான் எனக்கும் அதில் உடன்பாடு இருக்கிறது என்று கூறுகிறார்.

புரிஞ்சிக்க முடியலையே
என்னதான் இருந்தாலும் அரசு குணசேகரன் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதற்கு முன்பே அப்பத்தாவின் ஷேர் எவ்வளவு இருக்கிறது. என்னென்னவெல்லாம் அவருடைய பெயரில் சொத்தாக வருகிறது என்பதை விசாரிக்க சொன்னார். அதனால் நிஜத்தில் குணசேகரனை பழிவாங்குவதற்காக ஆதரையை வைத்து பங்கு கேட்கிறாரா? அல்லது இது அப்பத்தாவின் பிளான் தானா? என்பது தெரியவில்லை.

சந்தேகம் வருகிறது
ஆனால் கண்டிப்பாக சொத்துக்காக இந்த மாதிரி பேசக்கூடிய ஆள் அரசு இல்லை என்றாலும் தற்போது அரசு குடும்பமும் மாறிவிட்டார்களா? என்று தான் சந்தேகப்பட தோன்றுகிறது. என்றாலும் இதற்கு குணசேகரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதில் 40% சொத்துக்காக இதுக்கு ஓகே தான் சொல்லப் போகிறார் ஆக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

சக்தி கேட்பதும் சரிதானே
இந்த நிலையில் இதையெல்லாம் பார்த்து சத்தி ஜனனிடம் எல்லோரும் அவங்க அவங்க தேவையைகளை பற்றி யோசிக்கும் போது நாம் மட்டும் ஏன் நம்ம வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் கஷ்டப்படணும் என்று கேட்கிறார். இவர் கேட்பது சரியான கேள்வியாக இருந்தாலும் இதற்கு ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே குணசேகரன் அண்ணன் தம்பி அனைவரிடமும் தோட்டத்தில் வைத்து ஒரு நாள் கையெழுத்து வாங்கி வைத்திருப்பதால் அனைத்து சொத்துக்களும் குணசேகரின் பெயருக்கு மாறி இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் பார்ப்போம் இனி என்ன நடக்க போகிறது என்பதை.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications