Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபரப்பில் எதிர்நீச்சல்.. காணாமல் போன ஜீவானந்தம்.. ஈஸ்வரியை தேடி வந்த வெண்பா.. மாட்டிக்கொள்ளும் கதிர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்புக்கு வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் ஜீவானந்தத்தின் நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது என்று அப்பத்தா சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.

Ethirneechal Serial 2023 November 1st promo full update

அதே நேரத்தில் கௌதம் தான் கதிரை கடத்தியது என்று குணசேகருக்கு தெரியவரும் நிலையில் கதிர் பற்றிய ரகசியத்தை கரிகாலன் போட்டு உடைக்கிறார்.

இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். எதிர்நீச்சல் சீரியலில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கோவில் திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்து அடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் கதிர் கௌதமிடம் மாட்டியதும் அவருடைய கதை முடிந்தது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசியில் ஏமாற்றம் கிடைக்க வைத்து விட்டனர்.

Ethirneechal Serial 2023 November 1st promo full update

அதே நேரத்தில் கதிர் அடிப்பட்டு வந்திருக்கும் செய்தியை கேட்ட பிறகும் நந்தினி அலட்சியமாக இருந்தது, அவருக்குள் இருக்கும் வெறுப்பை காட்டியது. ஏற்கனவே நான் சொன்னது இப்போது நடந்து விட்டது என்று நேற்று ஈஸ்வரியும் ரேணுகாவும் கதிரை போய் பாரு என்று சொல்லும்போது கூட நந்தினி அசால்ட்டாக சொல்லி இருந்தார். அதே நேரத்தில் குணசேகரன் நடந்து கொள்ளும் விதம் குறித்து தர்ஷன் தன்னால் இனி அமைதியாக இருக்க முடியாது என்று கோபமாக பேசியிருந்தார்.

இப்படியாக நேற்றைய எபிசோடு இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தா ஜீவானந்தத்தை பங்க்ஷனுக்கு கூப்பிட்டு இருந்தேன். ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியல, சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. உனக்கு ஏதாவது தெரியுமா? என்று அப்பத்தா ஈஸ்வரியிடம் கேட்கிறார். அதைத்தொடர்ந்து குணசேகரனிடம் கரிகாலன் இந்த கௌதம் பையன் இவரை கடத்தினது தானே உங்களுக்கு தெரியும்.

Ethirneechal Serial 2023 November 1st promo full update

இவர் எப்படி போனார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று போட்டுக் கொடுக்கிறார். அடுத்ததாக சக்திக்கு ஒரு போன் வருகிறது ஃபோனை ஈஸ்வரி இடம் சக்தி கொடுக்க அதில் பர்ஹானா பேசுகிறார். நாங்கள் இப்போ உங்க வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். நீங்க கொஞ்சம் வெளியே வர முடியுமா என்று கேட்கிறார். அப்போது வீட்டு மருமகள் எல்லோரும் வெளியே வாசலில் சென்று பார்க்க காரில் பர்ஹானா நிற்கிறார்.

காருக்குள் ஒரு நபர் இருக்கிறார். ஈஸ்வரி காரில் இருக்கும் நபரோடு பேசுகிறார். அதை மறைந்து இருந்து ஜான்சி ராணி பார்த்து விடுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியை தேடி வெண்பா தான் வந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பர்ஹானாவிடம் வெண்பாவை ஜீவானந்தம் விட்டு விட்டு சென்றிருப்பார்.

Ethirneechal Serial 2023 November 1st promo full update

அப்போதும் வெண்பா நான் ஈஸ்வரி அம்மாவை பார்க்க வேண்டும் அவரோடு போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார். அதனால் அவர்தான் வந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் இப்போது ஈஸ்வரி வெண்பாவோடு பேசுவதை ஜான்சி ராணி பார்த்தால் இது ஜீவானந்தத்தின் குழந்தைதான் என்பது மொத்த குடும்பத்திற்கும் தெரியவரும். அதனால் இனி என்ன பிரச்சனை நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் ஒரு வேலை கௌதம் கதிரை கடத்தியது போல ஜீவானந்தத்தை வேறு எதுவும் ஸ்கெட்ச் போட்டு குணசேகரன் தூக்கி விட்டாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சில நேரங்களில் இவர்கள் இவ்வளவு பில்டப் கொடுத்து விட்டு கடைசியில் புஸ் என்று ஆக்கி இருக்கிறார்கள். அதுபோல இப்போதும் அதிகமாக பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+