எதிர்நீச்சலில் அதிரடியாக மாற்றப்பட்ட கதைக்களம்.. சாருபாலாதான் இனி வில்லியே.. இனி கதை இதுவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் தன்னை எதிர்த்து தேர்தலில் நிற்கும் சாரு பாலாவை தோற்கடிப்பதற்காக புது பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் வழக்கம் போல ஜனனி குணசேகரனிடம் நாங்க தான் ஜெயிக்கப் போறோம் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா நிலைமை என்ன ஆனது என்று கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு பக்கம் அப்பத்தா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல அப்பத்தாவை ஒரு வேளை ஜீவானந்தம் மறைத்து வைத்திருக்கிறாரா? அல்லது குணசேகரன் மறைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது.

இந்த நிலையில் அப்பத்தா ஆசைப்பட்டபடி வீட்டு பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் இனி பயணத்தை தொடங்கி விட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் அந்த முயற்சியிலும் குணசேகரன் தடை கற்களை அள்ளி வீசி இருக்கிறார். ஜீவானந்தம் சொன்ன மாதிரியே ஈஸ்வரிக்கு காலேஜில் வேலை கிடைத்திருந்த நிலையில் தான் இனி வேலைக்கு செல்வது உறுதி என்று வீட்டை விட்டு கிளம்பி கெத்தாக போயிருந்த ஈஸ்வரியை காலேஜுக்கு போய் அனைவர் முன்பும் குணசேகரன் அவமானப்படுத்தி இருந்தார்.

அதனால் ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் இந்த கல்லூரியில் இனி என்னால் வேலை பார்க்க முடியாது என்று கிளம்பி வந்துவிட்டார். இதனால் கடுப்பான ஜனனி வழக்கம் போல தற்போது வெளியான ப்ரோமோவில் குணசேகரிடம் வாக்குவாதம் செய்கிறார். அதில் மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால் நீங்க இந்த வீட்டுக்குள்ளேயே நாங்க முடங்கிடந்து விடுவோம் என்று மட்டும் நினைக்காதீங்க.

இனிமேல் தான் நாங்கள் வேகமாக செயல்படுவோம் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரனுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி வருகிறது. அதாவது பிசினஸ் எலக்ஷனில் எஸ் கே ஆர் குடும்பத்தின் சார்பாக சாருபாலா குணசேகரை எதிர்த்து போட்டியிட போவதாக தகவல்களை சிலர் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோபமான குணசேகரன் சாருபாலாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் இவள் ஒருத்தியால் தான் முடியும் என்று ஈஸ்வரியை பற்றி பேசுகிறார். இதனால் குணசேகரன் இனி எலெக்ஷனில் ஈஸ்வரியை இறக்க வைக்க போகிறார். அதே நேரத்தில் இனி ஈஸ்வரி எலெக்ஷனில் ஜெயித்து தன்னுடைய திறமையை காட்ட இருக்கிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ஈஸ்வரி எலக்ஷனில் ஜெயித்து குணசேகரனை இனி ஆட்டி படைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications