எதிர்நீச்சலில் அதிரடியாக மாற்றப்பட்ட கதைக்களம்.. சாருபாலாதான் இனி வில்லியே.. இனி கதை இதுவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் தன்னை எதிர்த்து தேர்தலில் நிற்கும் சாரு பாலாவை தோற்கடிப்பதற்காக புது பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் வழக்கம் போல ஜனனி குணசேகரனிடம் நாங்க தான் ஜெயிக்கப் போறோம் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா நிலைமை என்ன ஆனது என்று கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு பக்கம் அப்பத்தா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல அப்பத்தாவை ஒரு வேளை ஜீவானந்தம் மறைத்து வைத்திருக்கிறாரா? அல்லது குணசேகரன் மறைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது.

இந்த நிலையில் அப்பத்தா ஆசைப்பட்டபடி வீட்டு பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் இனி பயணத்தை தொடங்கி விட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் அந்த முயற்சியிலும் குணசேகரன் தடை கற்களை அள்ளி வீசி இருக்கிறார். ஜீவானந்தம் சொன்ன மாதிரியே ஈஸ்வரிக்கு காலேஜில் வேலை கிடைத்திருந்த நிலையில் தான் இனி வேலைக்கு செல்வது உறுதி என்று வீட்டை விட்டு கிளம்பி கெத்தாக போயிருந்த ஈஸ்வரியை காலேஜுக்கு போய் அனைவர் முன்பும் குணசேகரன் அவமானப்படுத்தி இருந்தார்.

அதனால் ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் இந்த கல்லூரியில் இனி என்னால் வேலை பார்க்க முடியாது என்று கிளம்பி வந்துவிட்டார். இதனால் கடுப்பான ஜனனி வழக்கம் போல தற்போது வெளியான ப்ரோமோவில் குணசேகரிடம் வாக்குவாதம் செய்கிறார். அதில் மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால் நீங்க இந்த வீட்டுக்குள்ளேயே நாங்க முடங்கிடந்து விடுவோம் என்று மட்டும் நினைக்காதீங்க.

இனிமேல் தான் நாங்கள் வேகமாக செயல்படுவோம் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரனுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி வருகிறது. அதாவது பிசினஸ் எலக்ஷனில் எஸ் கே ஆர் குடும்பத்தின் சார்பாக சாருபாலா குணசேகரை எதிர்த்து போட்டியிட போவதாக தகவல்களை சிலர் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோபமான குணசேகரன் சாருபாலாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் இவள் ஒருத்தியால் தான் முடியும் என்று ஈஸ்வரியை பற்றி பேசுகிறார். இதனால் குணசேகரன் இனி எலெக்ஷனில் ஈஸ்வரியை இறக்க வைக்க போகிறார். அதே நேரத்தில் இனி ஈஸ்வரி எலெக்ஷனில் ஜெயித்து தன்னுடைய திறமையை காட்ட இருக்கிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ஈஸ்வரி எலக்ஷனில் ஜெயித்து குணசேகரனை இனி ஆட்டி படைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications