எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு வீடியோ மூலம் ஆப்பு வைக்கும் ஜீவானந்தம்.. கோபத்தில் சக்தி கேட்ட கேள்வி
அதில் ஈஸ்வரி ஜீவானந்தத்தோடு கோவில் திருவிழாவில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தனின் மகள் வெண்பா பற்றி ஜான்சி ராணி குணசேகரனிடம் போட்டுக் கொடுக்கிறார்.

அதுபோல ஜான்சி ராணி ஓவராக சவுண்ட் விட்டு சக்தி இடம் வாங்கி கட்டிக் கொள்கிறார். சக்தி கேட்ட கேள்வியை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களாகவே கோவில் திருவிழாவை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வந்த நிலையில் இப்போது கோவில் திருவிழா தொடங்கியிருக்கிறது.
அதில் யார் யாரை பழிவாங்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் ஜீவானந்தம் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அதனால் ஜீவானந்தத்திற்கு என்ன ஆனது என்று அப்பத்தா முதல் குணசேகரனின் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் குழப்பத்தில் பயந்து கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் மனைவியை கொன்றது நம்மதான் என்ற உண்மை ஜீவானந்தத்துக்கு தெரிந்ததுதான் சந்தோஷம் என்று மமதையில் குணசேகரனும், கதிரும் இருக்கின்றனர். இதனால் குணசேகரனால் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்து வர போகுதா அல்லது ஜீவானந்தம் மற்றும் கௌதமால் குணசேகரன் மற்றும் கதிர் உயிருக்கு ஆபத்து வரப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தா வீட்டில் இருந்து எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜான்சி ராணி குணசேகரனிடம் மண்டையில் ரெண்டு தட்டு தட்டி நான் கூட்டிட்டு வாரேன் நீங்க கிளம்புங்க அண்ணே என்று சொல்ல, அதனால் கோபமான சக்தி நாங்க ஏறுற கார்ல நீ கால் எடுத்து வச்சேன்னு வச்சுக்க கால ஒடச்சிபுடுவேன் என்று கையை நீட்டி பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி குணசேகரன் குரூப்போடு காரில் வந்து கோவில் திருவிழாவில் இறங்கி இருக்கிறார். அங்கு நடந்து போய் கொண்டு இருக்கும்போது ஜான்சி ராணி குணசேகரனிடம் உன் பொண்டாட்டி ஒரு பிள்ளையை தூக்கிக்கிட்டு குடுகுடுன்னு வடி வந்தா. நான் யாருன்னு போயி விசாரிச்சா ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு போட்டுக் கொடுக்கிறார்.
இதையெல்லாம் ஒரு பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் கோவிலில் இருக்கின்றனர். அப்போது குணசேகரன் எங்களுக்கு மரியாதை என்றால் உங்களுக்கு பிரச்சனை தானே என்று வீட்டு பெண்களிடம் கேட்க அதற்கு நந்தினி தலையில அடித்துக் கொள்கிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ஜீவானந்தத்தோடு ஈஸ்வரி வெண்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக கதிரும் வெளியே வருகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கோவில் திருவிழா காட்சிகள் இன்னும் எத்தனை மாதங்களுக்கு இழுக்க போகிறார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications