Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சலை விட்டு விலக முடிவு எடுத்த ஆதிரை.. அவரே சொன்ன காரணம் இதுதான் ..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியலால் தான் பட்ட கஷ்டம் குறித்து ஆதிரை கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்தியா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகை சத்தியா தன்னுடைய சீரியல் அனுபவங்கள் குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகை சத்தியா சொன்ன வார்த்தையை கேட்டு ரசிகர்கள் தொடர்ச்சியாக அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Ethirneechal serial Adhirai decided to quit in this serial what is the reason

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு புரட்சி செய்யும் சீரியலாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ஆண்கள் தரப்பிலும் அதிகமான வரவேற்பு மற்றும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த அளவிற்கு இந்த சீரியல் தொடர்ச்சியாக பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஆதிரையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யா தேவராஜன் சமீபத்தில் பேட்டியில் இந்த சீரியல் பற்றி பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த சத்யாதேவராஜன் பிறகு முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் நடிகையாக மாறி இருக்கிறார். அருவி சீரியலில் ஒரு சில மாதங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியல் வேண்டாம் என்றுதான் நினைத்தாராம்.

ஆனால் பிறகு கதை கேட்டதும் இவர் உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். ஆனால் இப்போது நான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் என்னைவிட இந்த உலகத்தில் யாருமே முட்டாள் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு கிடைத்த பெரிய ஒரு வாய்ப்பை நான் விட்டு விட பார்த்தேன். ஆனால் நல்லவேளையாக கடைசி நேரத்தில் நான் முடிவை மாற்றி இந்த சீரியலில் கமிட்டாகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு நான் சீரியலில் பார்ப்பதற்கு தான் ஒரு டெரர் பீஸ் போல இருப்பேன். ஆனால் நிஜத்தில் ஜாலியான கேரக்டராக இருந்தாலும் சின்ன நெகட்டிவிட்டியை கூட தாங்கிக் கொள்ள மாட்டேன். ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் என்னுடைய கேரக்டர் தவறாக இருக்கும்போது பலர் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட எனக்கு அது பெரியதாக இல்லை .

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆதிரை காதல் ட்ரேக் முடித்து விடுங்கள். இது மோசமாக இருக்கிறது. என்றெல்லாம் என்னை பற்றி கண்டமேனிக்கு கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். அதனால இந்த சீரியலை விட்டு விலகிடலாம்னு கூட நான் நினைச்சேன். எங்க செட்டிலிருந்த அனைவரிடம் கூட நான் இதுபற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பேன். எல்லோரும் எனக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

ஆனால் முதல்முறையா ஆதிரை மற்றும் கரிகாலன் கல்யாண நாள் அன்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சாதனை படைத்திருந்தது. ரசிகர்கள் எந்த அளவிற்கு நமக்கு ஆறுதல் தருகிறார்களே என்று அப்போ நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அதுபோல இப்போ எனக்கு அதிகமானோர் பாசிட்டிவ் ஆகவே கமெண்ட் போடுறாங்க. வெளியே போகும் போது கூட ஆதிரை என்று பேசி பலர் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். இது எனக்கு சந்தோசமா இருக்கு என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+