Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சலில் அப்பத்தா கைரேகை எடுத்தது.. விளக்கம் கொடுத்த இயக்குனர்.. இத்தனை ட்விஸ்ட் இனி இருக்காம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கோமாவில் இருந்த அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்து ஜீவானந்தம் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி இருந்தார்.

அது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அது எதற்காக அப்படி செய்யப்பட்டது என்பது குறித்து சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 Ethirneechal Serial Appattha took fingerprints The director gave an explanation

அத்தோடு அந்த காட்சி எடுத்ததற்காக பிரபல வழக்கறிஞர் ஒருவர் தனக்கு பக்கம் பக்கமாக எழுதி அனுப்பியதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில், நகரப்புறங்களிலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடந்த சில நிகழ்வுகள் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது. நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட முடியவில்லை என்று ரசிகர்கள் சில சீன்களை குறித்து கூறி வந்தனர்.

அதிலும் கோமாவில் இருந்த அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்த ஜீவானந்தம் பிறகு தன்னுடைய பெயருக்கு அப்பத்தாவின் 40% சொத்துகளை மாற்றியிருந்தார். இது குறித்து அதிகமாக இணையதளத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய பத்திரப்பதிவு நடைமுறைகள் தெரியாமல் சீரியல் தரப்பில் இருந்து இந்த மாதிரி ஒரு அபத்தமான காட்சிகள் எடுக்கப்பட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் எல்லோரும் பிற்பகுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரியாமலே முற்பகுதியில் நடந்து கொண்டிருப்பதை வைத்து கேள்வி கேட்டு வருகிறார்கள். இனி இதற்கான விளக்கத்தை நான் பிறகு தான் கொடுக்கப் போகிறேன். எதனால் அப்பத்தாவின் கைரேகை எடுக்கப்பட்டது என்பது பிறகு தெரியவரும். அதே நேரத்தில் நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கிறது.

வாழ்க்கையில் பலரையும் கவர வேண்டும் என்பதற்காக சில சிக்கல்களை உடைக்க தான் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தெரியும் சில லாஜிக் சினிமாவில் பார்க்க கூடாது என்பது, அந்த மாதிரி தான் இந்த சீன் கூட அமைந்திருக்கிறது. கதையில் சுவாரசியத்திற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு தெரியாமல் ஒன்றும் அந்த மாதிரி காட்சிகளை வைக்கவில்லை. எனக்கும் பத்திரபதிவு அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஏனென்றால் நானும் அடிக்கடி பத்திரபதிவு அலுவலகத்திற்கு போயிட்டு வந்து தான் இருக்கிறேன்.

ஆனாலும் இது நான் தெரியாமல் இந்த காட்சிகள் வைத்து விட்டதாக கருதி வழக்கறிஞர் ஒருவர் பக்கம் பக்கமாக பத்திரப்பதிவு எப்படி எல்லாம் செய்ய வேண்டும் நீதிமன்றத்தில் அது குறித்த நடைமுறை சிக்கல்கள் என்ன என்றெல்லாம் எனக்கு எழுதி அனுப்பி இருக்கிறார். அதற்கு நான் சிரிக்க தான் தோன்றுகிறது.

நானும் சில காட்சிகள் வைப்பது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் வழக்கறிஞரிடம் பேசிவிட்டு தான் அதை செய்கிறேன். ஆனால் இந்த காட்சிகள் வைத்ததற்கான உண்மையான காரணம் இனிவரும் நாட்களில் தெரியவரும் என்று ஜீவானந்தமாக நடிக்கும் இயக்குனர் திருச்செல்வம் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+