Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல்: ஈஸ்வரியிடம் நேரடியாக கேள்வி கேட்டு மோதும் சாருபாலா.. சக்தி செய்த செயல்.. செம முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் தேர்தலுக்கு நாமினேசன் செய்யப்போன இடத்தில் சாருலதா ஈஸ்வரியிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்.

Ethirneechal Serial November 29th 2023 promo and episode full episode

அதனால் குணசேகரன் கோபமாக இருக்க அப்போது சக்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியை வைக்கிறார். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் எஸ் கே ஆர் க்கு பதிலாக தேர்தலில் நிற்கும் சாருலதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியை தேர்தலில் போட்டியாளராக நிறுத்துவதற்கு குணசேகரன் முடிவு செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ஈஸ்வரி கூறுகின்றார்.

பிறகு ஜனனி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் காலேஜில் நீங்கள் பணத்துக்காகவோ, மரியாதைக்காகவோ வேலைக்கு செய்ய சேரவில்லை. பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தானே வேலைக்காக போனீங்க. அதுபோல இப்போது உங்களுக்கு பதவி கிடைத்தால் அதை வைத்து பலருக்கு உதவி செய்யலாம் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் எளிதாக நம்முடைய விருப்பத்தின் படி வேலையை செய்ய இந்த குணசேகரன் குடும்பத்தினர் விடமாட்டாங்க.

Ethirneechal Serial November 29th 2023 promo and episode full episode

நம்மளை டம்மியாக வைத்துக்கொண்டு அவர்கள் காரியம் சாதிப்பார்கள் என்று சொல்ல, அதற்கு ஜனனி அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கிறது? இதுவரைக்கும் அதிகாரமும் பண வசதியோ எதுவுமே நம்மிடம் இல்லாமல் தான் நாம் அமைதியாக இருந்தோம். இப்போ நீங்கள் சுயமாக யோசிக்க கூடிய நிலைக்கு வந்து இருக்கீங்க.

இப்போ உங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாம் பலருக்கு உதவியும் செய்யலாம் நம்மளும் சுயமாக தன்மானத்தோடு இருக்கலாம் என்று அறிவுரை கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நாமினேஷன் செய்வதற்காக குணசேகரன் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர்.

மறுபக்கத்தில் எஸ் கே ஆர் குடும்பத்தினரும் சாரலதாவோடு வந்திருக்கின்றனர். அப்போது சாருலதா இந்த தேர்தலில் நான் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் தான் நிற்கிறேன். அதே மாதிரி என்னை எதிர்த்து போட்டியிடுகிற ஈஸ்வரி சொல்ல முடியுமா? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார்.

அதைத் தொடர்ந்து கதிர் எங்க வழியில் குறுக்க வந்ததால தான் உங்க தம்பி காலை ஒடச்சுக்கிட்டு இருக்கான் என்று சொல்ல, அதற்கு அரசு அப்படி ஆகிறதுக்து காரணம் யார் என்பது நல்லாவே தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். இவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது சக்தி இந்தாங்க முடிவு கடைசில ஓட்டு போடறவங்க ஜெயிக்க போறாங்க, போய் வேலையை பாருங்க என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

Ethirneechal Serial November 29th 2023 promo and episode full episode

இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியோடு சேர்ந்து அந்த வீட்டு மருமகள்கள் முன்னேற வேண்டும் என்பது சார்லதாவின் விருப்பமாக இருக்கிறது. இப்போதும் கூட குணசேகருக்கு எதிராக ஜீவானந்தத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜனனி சொன்னதால் ஜீவானந்தத்தின் வழக்கறிஞராக சாருலதா சேர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் இனி ஈஸ்வரி தன்னை எதிர்த்து போட்டியிடப் போவதால் சாருலதா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இனி சாருலதா பாசிட்டிவான கேரக்டரில் இருக்கிறாரா? அல்லது வில்லியாக மாறப் போகிறாரா? என்பது வரும் நாட்களில் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+