எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி? அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா? கதை தலைகீழாக போகுமா!
சென்னை: ஒரு காலத்தில் சின்னத்திரை ரசிகர்கள் தினமும் காத்திருந்து பார்க்கும் சீரியல் அது எதிர்நீச்சல் தான். குடும்ப அரசியல், பெண்களின் போராட்டம், ஆதி குணசேகரனின் ஆட்டம் - இப்படி பரபரப்பாக போய்கிட்டிருந்த கதை திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதனாலேயே முதல் சீசன் திடீர்னு முடிவுக்கு வந்தது.
அதை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் இரண்டாவது சீசன் வந்தது அதுவும் நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது. இந்த நிலையில் இப்போது இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத என்ட்ரி வரப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களை ரொம்பவே எக்சைட் பண்ணியிருக்குது.

ஆதி குணசேகரனின் திடீர் மாற்றம்
இதுவரை கடுமையான வில்லனாக இருந்த ஆதி குணசேகரன் திடீர்னு மென்மையாக பேச ஆரம்பிச்சது ரசிகர்களுக்கே சந்தேகம். "இவ்ளோ சீக்கிரமா மனசு மாறிடுவாரா?"ன்னு சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துட்டே இருக்கு. பலரும் இது ஏதோ பெரிய சூழ்ச்சிக்கான முன்னோட்டமா இருக்கும் என்று பேசிக்கிட்டு இருக்காங்க.
ஈஸ்வரியின் ரீ-என்ட்ரி
குணசேகரனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் போராட்டம் நடத்திய ஈஸ்வரி கண் திறக்கப் போறாங்கன்னு தகவல் பரவியிருக்குது. அந்த ஒரு காட்சி வந்துட்டா கதையே வேற லெவலுக்கு போயிடும் என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை. இதுவரை அமைதியாக கண்ணீர் வடித்த ஈஸ்வரி, இனிமேல் அதே மாதிரி இருப்பாங்களா? இல்ல வேற மாதிரி மாறுவாங்களா?ன்னு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கு.
தேவயானி என்ட்ரி
இந்த நேரத்தில்தான் இன்னொரு தகவல் பரவ ஆரம்பிச்சது. ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வந்த நடிகை கனிகா நான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக கோலங்கள் சீரியல் நாயகி தேவயாணி வரப்போறாங்கன்னு சொல்லப்படுது. இது உண்மையா இருந்தா, அது சாதாரண கம்பேக் கிடையாது. சின்னத்திரை ரசிகர்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயம்.
தேவயாணி என்றாலே குடும்ப பெண்களின் மனசை கவர்ந்த நடிகை. பல வருடங்களாக வெள்ளி துறையிலும், சின்னத்திறையிலும் தன்னுடைய தனி இடத்தை பிடிச்சிருக்காங்க. அவங்க நடிப்பு, டயலாக் டெலிவரி, முகபாவனை - எல்லாமே ரொம்ப இயல்பாக இருக்கும். அந்த மாதிரி ஒரு நடிகை எதிர்நீச்சல் மாதிரி ஒரு வலுவான கதைக்கு வந்துட்டாங்கன்னா, கதை இன்னும் பலம் பெறும் என்பது நிச்சயம்.
இனி ஈஸ்வரி மௌனம் காக்க மாட்டாரா?
தேவயாணி இந்த ரோலில் வந்தா, ஈஸ்வரி இனிமேல் அமைதியா இருக்க மாட்டாங்கன்னு ரசிகர்கள் நம்புறாங்க. தன்னை அழிக்க முயன்ற குணசேகரனையே நேரில் நின்று கேள்வி கேட்பாரா? குடும்பத்துக்குள் நடந்த அநியாயங்களுக்கு பதில் கேட்பாரா? பெண்கள் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் முன்னணியில் நிற்பாரா?ன்னு பல கேள்விகள் எழுந்து கொண்டு இருக்கு.
இதுவரை வீட்டு சண்டை மாதிரி இருந்த விஷயம், இனி நேரடி மோதலாக மாறும் சூழல் உருவாகியிருக்கு. பெண்களின் தன்னம்பிக்கையை மையமாக வைத்து போகும் இந்த கதையில், ஈஸ்வரியின் திரும்பி வருதல் ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட் ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா?
இப்போ வரை சேனல் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரல. ஆனா இந்த ஒரு தகவல் போதும்னு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்காங்க. சமூக வலைத்தளங்களில் "தேவயாணி வந்துட்டாங்கன்னா குணசேகரனுக்கு இனி ஆப்பு தான்டா!"ன்னு மீம்ஸ்களும் சுற்றி வருகிறது.
உண்மையிலேயே தேவயாணி எதிர்நீச்சலில் களமிறங்குவார்களா? ஈஸ்வரியின் கதை இனிமேல் எப்படி நகரும்? ஆதி குணசேகரனின் அமைதிக்குப் பின்னால் என்ன இருக்கிறது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப்போவது அடுத்தடுத்த எபிசோடுகள் தான்.
ஒரு விஷயம் மட்டும் உறுதி - தேவயாணி என்ட்ரி நடந்துட்டா, எதிர்நீச்சல் TRP வேற லெவலுக்கு போகும்!
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?














Click it and Unblock the Notifications