முன்னாள் கணவர் இறந்த நிலையில் நடிகை வனிதா வெளியிட்ட பதிவு.. இந்த மாதிரியா? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நேரத்தில் நடிகை வனிதாவின் கடைசி instagram பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் இருந்தாலும் இந்த நேரத்தில் இந்த பதிவு தேவையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் விஜயகுமாரின் மகள் ஆன வனிதா ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் வெள்ளி திரையில் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக இருந்த நிலையில் பிறகு சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனில் கொளுத்தி போட்ட சண்டை பெரிய அளவில் வெடித்து வந்தது. ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அடிக்கடி கண்டெண்ட் கொடுத்து வந்ததாலோ என்னவோ இவரை அதிகமான ரசிகர்கள் திட்டினாலும் இவரால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதாக கூறி வந்தனர்.
அதே நேரத்தில் நடிகை வனிதாவின் குடும்ப பிரச்சனையும் சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் வெட்ட வெளிச்சம் ஆனது தான். நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை குடும்ப வாழ்க்கையின் திறந்த புத்தகமாக அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகத்தான் இருந்து வருகிறது. அவர் 2020 ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து இருந்தார்.
தங்கள் மகள்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் குடும்பத்தோடு கோவா சென்று இருந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் பீட்டர் பாலை நடிகை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது
அதற்குப் பிறகு இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பீட்டர் பால் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறிப்பு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படிப்பட்ட நிலையில் வனிதா நேற்றைய தினம் தன்னுடைய மகள்களோடு பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறா
என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் காதலித்த நபர் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் கூட ஜாலியாக இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கமாண்ட் அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வனிதா பதிவுகளை வெளியிட்டது நேற்று என்பது பலரும் கவனிக்க மறந்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications