Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனிதா அவங்க அப்பா இருக்கிற தெருவில் நின்று செய்த விஷயம்.. நானே பார்த்தேன்! பாத்திமா பாபு எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகி ஆக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வனிதா குறித்து சில விஷயங்களை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகின்றார். அதில் வனிதா தன்னுடைய திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தன்னுடைய அப்பா வசிக்கும் தெருவில் நின்று செய்த செயலை பார்த்து நான் எமோஷனல் ஆனேன் என பாத்திமா பாபு கூறியிருக்கிறார்.

நடிகை வனிதா பற்றிய செய்திகள் இணையத்தில் எப்போதும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. அவருடைய திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக இருப்பது, மற்றும் அவருடைய வெளிப்படையான பேச்சு அவரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்து வந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Fatima Babu Vanitha Vijayakumar

வனிதா நடிக்கும் திரைப்படம்

இந்த திரைப்படத்திற்கான ப்ரமோஷனில் வனிதா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்திருக்கிறார். அது குறித்து ஜோவிகா பேசும் போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துதான் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் உள்ள பணத்தை இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அதில் என்னுடைய அம்மாவை ஹீரோயினியாக நடிக்க வைத்திருப்பது எனக்கு சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.

பாத்திமா பாபு பேட்டி

அதுபோல தன்னுடைய மகள் தயாரிக்கும் படத்தில் தான் நடிப்பது குறித்தும் வனிதா பெருமையாக பேசி இருக்கிறார். அதேபோல வனிதா நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் வனிதா தன்னுடைய அப்பா மற்றும் சகோதரி, சகோதரர்களை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வனிதா பற்றி பாத்திமா பாபு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது, வனிதா எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருக்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

போஸ்டர் ஒட்டிய வனிதா

வனிதாவை எனக்கு அவருடைய 18 வயதிற்கு முன்பு இருந்தே தெரியும். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக வனிதா ரொம்பவும் உழைப்பை போட்டு இருக்கிறார். படத்தைப் பற்றிய போஸ்டர் ஒட்டுவாங்கல்ல, அந்த போஸ்டரை விடிய காலையில் எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கும் போது வனிதாவே அவர்களோடு சென்று அதை எல்லாம் பார்த்து இந்த இடத்தில் ஒட்டுங்க, அந்த இடத்தில் ஒட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

வனிதா செய்த செயல்

ஆனால் வனிதா அவருடைய அப்பா (விஜயகுமார்) வசிக்கும் தெருவில் அதிகமான போஸ்டர்கள் ஒட்ட சொல்லி இருந்தார். காரணம் அவங்க அப்பா முன்னாடி நான் இப்போ எப்படி இருக்கிறேன் பாருங்க என்று சொல்வதற்காக தான் வனிதா பல கஷ்டங்கள் பட்டு இருந்தாலும் இன்று அவருடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. வனிதா எப்போதுமே அவரை சுற்றி இருக்கிறவங்க நல்லா இருக்கணும் என்று நினைப்பாங்க.

கண் கலங்கிய வனிதா

கூட இருக்கறவங்க நல்லா இருக்கணும், இவங்க நல்லா இருக்கணும், அவங்களுக்கு அது பண்ணனும் என்று நினைப்பதுதான் வனிதாவின் குணம். ஆனால் அதுதான் அவளுக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. இப்போ இருக்கிற சோசியல் மீடியாவால் நம்முடைய முகத்துக்கு நேரா பேச முடியாதவங்கள் கூட எவ்வளவு தரம் தாழ்ந்து கமெண்ட் பண்ணுறாங்க. அதை எல்லாம் தாண்டி வனிதா வந்து கொண்டிருக்கிறார் என்று பாத்திமா பாபு பேசியிருக்கிறார். அவர் பேசும்போது வனிதா எமோஷனல் ஆகி கண்கலங்கி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+