அர்ச்சனா மகளை இறுக்க அணைத்த கேபி.. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு தற்போது அவர் போட்ட போஸ்டை பார்த்து கலாய்க்கும் ரசிகர்களும் அதிகமாகி விட்டார்கள் .
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று கலாய்க்கும் நெட்டிசன்கள் அதிகமாகிவிட்டார்கள். யாராக இருந்தாலும் ஒருவரின் உணர்வுகளுடன் இந்தமாதிரி விளையாடக்கூடாது என்று அர்ச்சனாவின் ரசிகர்களும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
ஜீ தமிழின் செல்ல பிள்ளையாக இருந்து கொண்டிருந்த அர்ச்சனா அந்த சேனலில் தொகுத்து வழங்காத சேனல் நிகழ்ச்சிகளை இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது கீழே வைத்துக் கொண்டிருந்தவர்.
பிக் பாஸ் அர்ச்சனா
திடீரென்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து விட்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதே பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவர் இந்தக் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்த பிறகு இவருடைய ரசிகர்களாக இருந்தவர்கள் கூட இவரை திட்டி தீர்த்து கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அன்பு கேங்கின் தலைவி
அந்த வீட்டிற்குள் வந்த நாளில் இருந்தே இவர் தனது கட்டுப்பாட்டுக்குள் அனைவரும் இருக்க வைத்துக் கொண்டிருந்தார். ஒன்று அன்பால் அல்லது அதட்டியாவது வைத்துக்கொள்ளலாம் என்று பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தான் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த வீட்டிற்குள் நன்றாக என்ஜாய் பண்ணி கொண்டுதான் இருந்தார்.
மகனாக மாறிய பாலா
முதலில் பாலாவிற்கு க்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வர ஆரம்பமாக இருந்தது. பாலாவிற்கு இவருக்கும் பிரச்சனை ஏற்படும் போது இவர் முதலில் அதட்டி பார்த்தார் பின்பு நீ என் மகன் மாதிரி என்று அவரை மடியில் வைத்துக் கொண்டு அடக்க நினைத்தார். ஆனால் அதுவும் நடைபெறாத பழிக்காததால் மீண்டும் அவருடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அனிதாவுடன் அன்பு
அனிதா முதல் பலரிடமும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனாலேயே பலரும் இவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சீசனில் இவர் தான் வனிதா என்று கூட பலரும் கலாய்த்து வந்தனர். அன்பு டீமில் இருந்தவர்களில் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருந்தது கேப்ரில்லா தான் .அதனால் தான் இவரை இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தித்து வருகின்றனர் .
கேபியிடம் அன்பு
அந்த மாதிரி தான் தற்போது கேப்ரில்லாவும் அர்ச்சனாவின் மகளான சாராவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு நான் சென்ற பிறகு என்னுடைய மகளான சாராவை நான் தேடிக் கொண்டிருந்தேன் அப்போது என் மகளை கேப்ரில்லா வாக பார்த்தேன் என்று ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
ரசிகர்கள் கலாய்
சும்மாவே கலாய்க்கும் ரசிகர்கள் இந்த மாதிரி அர்ச்சனா போஸ்ட் போட்டதும் நெகட்டிவ் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர் .அதனை பார்த்து கொதித்துப் போன அர்ச்சனாவின் ரசிகர்களும் பதிலுக்கு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். தற்போது இந்த போட்டோக்களும் இதற்கான கமெண்டுகளும் தான் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.