வீட்டுக்குள்ளே இருக்கும் நடிகை கனகா..பார்க்க போன கங்கை அமரன்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சு
சென்னை: நடிகை கனகா ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே அடைந்து இருக்கிறார்.
யாரையும் பார்க்க விரும்பாமல் கனகா தனிமையில் இருக்கும் நிலையில் அவரைப் பற்றி முதல் முறையாக இயக்குனராகவும், பாடகராகவும், இசை அமைப்பாளராகவும் இருக்கும் கங்கை அமரன் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை கனகாவை முதன்முதலாக கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது கங்கை அமரன் தான். ஆனாலும் அவரும் கனகாவை பார்ப்பதற்காக முயற்சி எடுத்தும் அது நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

நடிகை கனகா என்ற பெயரை சொன்னதுமே பலருக்கும் ஞாபகம் வருவது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அவர் மட்டுமல்லாமல் அவர் கண் கூட தனியாக நடித்து இருக்கும். பல இடங்களில் அவருடைய கண் அசைவு பல ரசிகர்களை கட்டி இழுத்திருக்கும். அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அதிகமான ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் வீட்டுக்குள்ளே அடைந்திருக்கும் நிலையில் அவர் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் பேசி இருக்கிறார். அதில் நானும் கனகவை பற்றிய செய்திகளை எல்லாம் படிக்கும்போது ஐயோ ஏன் இந்த பொண்ணு இப்படி ஆயிடுச்சு. எப்படியாவது இந்த பொண்ண சந்திக்கணும்னு நினைச்சு ரொம்பவே ட்ரை பண்ணுனேன்.
கனகாவுக்கு ஒரு முறை நான் போன் பண்ணும் போது போனை எடுத்து யாருன்னு கேட்டுச்சு, நான் யாருன்னு சொல்றதுக்கு முன்னாடியே பிறகு வைத்துவிட்டது. அதோடு நான் விடாமல் இன்னொரு முறை கூட போன் பண்ணுனேன் அப்போ போனை எடுக்கவே இல்ல. அதற்குப் பிறகு கனகா வீட்டிற்கே சென்று அவரைப் பார்த்து விட வேண்டும் என்று முயற்சி செய்தேன்.
ஆனால் யாரையும் சந்திக்கிற மனநிலையில் இல்லை என்று பார்க்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். கனகா இருக்கும் வீட்டில் கேட் ரொம்ப தூரம் முன்னாடி இருக்கிறது. கனகா வீட்டிற்குள்ளே பெட்ரூம் விட்டு வெளியே வருவதே கிடையாது. வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதால் நாம கேட்டிலிருந்து தட்டினாலும் திறக்க மாட்டாங்க. அதுபோல ஹாலிங் பெல் அடிச்சாலும் திறக்க மாட்டாங்க.
அதனாலதான் இப்ப வரைக்கும் நான் பார்க்க முடியாம ஆகிட்டு இருக்கு. எனக்கும் ஆசையா தான் இருக்கு ஒரு முறை அந்த பொண்ண பார்த்து பேசணும். மீண்டும் பழையபடி கலகலப்பா மாத்தணும்னு நினைக்கிறேன். அதுக்காக முயற்சி எடுத்தாலும் அது நடக்க மாட்டேங்குது என்று அந்த பேட்டியில் கங்கை அமரன் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications