ரோபோ சங்கர் இறப்பதற்கு 10 நாளுக்கு முன்பு நடந்த சம்பவம்.. கடைசியாக நடித்த படத்திலும் அதே நிலைமை! பிரியங்கா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான காமெடி, மிமிக்ரி திறமை, உடல்மொழி, டைமிங் கவுண்டர்களால் ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இல்லாவிட்டாலும், அவரை பற்றிய நினைவுகள் இன்னும் ரசிகர்கள் மனதில் புதிதாகவே இருக்கின்றன. குறிப்பாக, அவரது மனைவி பிரியங்கா சமீபத்தில் பகிர்ந்திருக்கும் உருக்கமான நினைவுகள் பலரையும் கலங்க வைத்துள்ளன.
ஒரு பேட்டியில் தனது கணவரை பற்றி மனம் திறந்து பேசிய பிரியங்கா, "என் கணவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஆனால், அவர் அப்படியே அமைதியாக போய்விடவில்லை போல தோன்றுகிறது. அவர் கடைசியாக நடித்த ஈகோ ராமன் படத்தின் கடைசி 15 நிமிடங்களில் அவர் கொடுத்த எமோஷனல் நடிப்பு அதை உணர வைத்தது. என் கணவரை ரொம்பவே மிஸ் செய்கிறேன்" என்று கண்கலங்க கூறியுள்ளார்.
இந்த ஒரு வரியே ரோபோ சங்கரின் குடும்பம் இன்னும் எவ்வளவு பெரிய இழப்பை சுமந்து கொண்டு இருக்கிறது என்பதை காட்டிவிட்டது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், சாதாரண கலைஞராக ஆரம்பித்து பெரிய அளவில் வளர்ந்தவர். மிமிக்ரி மேடைகளில் தன்னுடைய திறமையை காட்டி, பின்னர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது உடல்மொழி, வேகமான டயலாக் டெலிவரி, வித்தியாசமான காமெடி ஸ்டைல் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
அந்த திறமையை கவனித்த திரையுலகம் அவரை வெள்ளித்திரைக்கு அழைத்துச் சென்றது. தனுஷ் நடித்த மாரி போன்ற படங்கள் மூலம் ரோபோ சங்கர் பெரிய அளவில் கவனம் பெற்றார். அவரது நடிப்பால் கவரப்பட்டு தனுஷ் அவருக்கு தங்க செயின் பரிசளித்த சம்பவம் கூட ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
கேரியரின் உச்சத்தில் வந்த சோதனை
கேரியர் வேகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், சில தவறான பழக்கங்கள் அவரது வாழ்க்கையை சீர்குலைக்க தொடங்கியதாக கூறப்பட்டது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை காப்பாற்ற போராடினர். ஒரு கட்டத்தில் மரண வாசல் வரை சென்று மீண்டு வந்தார்.
அதன்பிறகு வாழ்க்கையை புதிதாக தொடங்கிய ரோபோ சங்கர், தனது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தினார். மீண்டும் கம்பேக் கொடுத்து சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வாழ்க்கை மீண்டும் சரியாகி வருகிறது என குடும்பம் நினைத்த நேரத்தில்தான் எதிர்பாராத துயரம் நடந்தது.
குடும்பத்தை உடைத்த பேரிழப்பு
ரோபோ சங்கரின் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்ந்திருந்த காலம் அது. மகள் இந்திரஜாவின் திருமணம் நடந்தது. குடும்பத்தில் புதிய குழந்தையும் பிறந்தது. இப்படி மகிழ்ச்சி தருணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தபோது, ரோபோ சங்கரின் திடீர் உடல்நலக்குறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
கடைசியாக நடித்த படம் - ஈகோ ராமன்
ரோபோ சங்கரின் கடைசி திரைப்பயணமாக ஈகோ ராமன் படம் அமைந்துள்ளது. கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ள இந்த படம் மே 29 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர், இந்த படத்தில் உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு வேறொரு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடைசி 15 நிமிட காட்சிகள் குறித்து அவரது மனைவி கூறியிருப்பது இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இன்னும் மிஸ் செய்யும் ரசிகர்கள்
ரோபோ சங்கர் என்ற பெயர் வந்தாலே சிரிப்பு நினைவுக்கு வரும். ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் இருந்த போராட்டம், குடும்ப பாசம், வாழ்க்கை சோதனைகள் அனைத்தும் இப்போது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
ஒரு கலைஞன் போய்விட்டாலும், அவரது சிரிப்பு மட்டும் ரசிகர்களிடையே வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒரு மனைவிக்கும் குடும்பத்திற்கும் அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதையே பிரியங்காவின் இந்த பேட்டி உணர்த்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications