Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மது, சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகளாகிவிட்டது.. திடீரென மயங்கியது ஏன்? விஷால் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிப்பழக்கத்தை கைவிட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டதாக நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். பார்ட்டிக்கு கூட செல்வதில்லை என்று கூறியுள்ள விஷால், நல்ல உடல்நிலையோடு மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, மதகஜராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் சங்கச் செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

I stopped Drinking and Smoking before 5 years and didn t even attend the party now says Actor Vishal about his Health issue

கைநடுக்கத்துடன் விஷால்

இதனிடையே விஷாலின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வருவது ரசிகர்களிடையே விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால் மதகஜராஜா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால், கைகள் நடுங்க, வாய் குளறி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது விஷால் பார்ப்பதற்கும் பரிதாபமாக காட்சி அளித்ததால், அவரின் உடல்நிலைக்கு என்ன ஆனது என்றும் பலரும் கேள்வி எழுப்பினர்.

ப்ரமோஷன் யுக்தி

அப்போது விஷாலுக்கு, காய்ச்சல் இருந்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஷால் நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டார். இதனால் விஷால், படத்தின் ப்ரமோஷனுக்காகவே அப்படி நடித்தார் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

மயங்கி விழுந்த விஷால்

இந்த நிலையில், விஷால் 2 நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தில் கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது விஷால், திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விடப்பட்டார்.

காரணம் என்ன?

இதனால் மீண்டும் விஷாலின் உடல்நிலை குறித்த பேச்சுகள் அதிகரித்தது. இதனால் விஷாலின் கெட்டப் பழக்கங்கள் காரணமாக இதுபோன்ற பிரச்சனைகள் வருவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஷாலின் மயக்கத்திற்கு, அவர் காலையில் இருந்து சாப்பிடாமல் வெறும் ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விஷால் விளக்கம்

இதன் காரணமாகவே விஷாலுக்கு மயக்கம் வந்தது. அவர் நேரத்திற்கு சாப்பிட்டு, ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து விஷால் பேசுகையில், மது, சிகரெட் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை கைவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. மதுவை மறந்து 2 ஆண்டுகளாகிவிட்டது. சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டது.

கவலையில்லை

இப்போதெல்லாம் பார்ட்டிக்கு கூட போவதில்லை. கடைசியாக சுந்தர் சி சாரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு மட்டுமே சென்றேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி எந்த கவலையும் இல்லை. சிலர் அவர்கள் கற்பனைகளுக்கு சென்று என்ன வேண்டுமானாலும் பேசிவிடுகிறார்கள். அது என்னை ஒருநாளும் பாதிக்காது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+