Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயில்வான் சொன்னதெல்லாம் பொய்! கடைசி நேரத்தில் கணவரிடம் பவதாரிணி கேட்டது இதுதான்.. உறவினர் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி சில நாட்களுக்கு முன்பு காலமானார். ஆனால் அவர் பற்றி பயில்வான் ரங்கநாதன் உட்பட சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் ஆனால் பவதாரணி இறக்கும்போது கடைசி நேரத்தில் நடந்தது இதுதான் என்பது பற்றி பவதாரிணியின் கணவரின் அண்ணன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதில் பவதாரிணி அவருடைய கணவரை இளையராஜாவுக்காக பிரிந்து விட்டார் என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் சொல்லியிருந்தார். ஆனால் அதுவெல்லாம் உண்மை இல்லை, நிஜத்தில் பவதாரணி அவருடைய கணவருடன் தான் வாழ்ந்து வந்தார் என்றும் பவதாரிணியை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனது அவருடைய கணவர் தான் என்றும், அப்போது பவதாரிணி அவருடைய கணவரிடம் சில விஷயங்களை கேட்டிருக்கிறார் என்பது பற்றியும் அவருடைய உறவினர்கள் பகிர்ந்து இருக்கின்றனர்.

 Ilayaraja Daughter Bhavatharani what asked her husband at the last moment

அந்த வகையில் நடிகரும் பிரபல பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த மாதிரி தான் சமீபத்தில் மறைந்த பவதாரிணி குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசி இருந்தார்.

அதில் பவதாரிணி இளையராஜாவின் செல்ல மகள். இளையராஜா பவதாரிணிக்காக எதையும் செய்வார். வீட்டில் பவதாரிணி உடைய அண்ணன்கள் கூட எது அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றாலும் பவதாரிணி மூலமாக தான் கேட்பார்கள். பவதாரிணிக்கு சபரி ராஜ் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலே சபரியை பவதாரிணி பிரிந்து விட்டார்.

கணவரை பிரிந்து தன்னுடைய அப்பா இளையராஜா வீட்டில்தான் பவதாரிணி வசித்து வந்தார் என்றெல்லாம் பயில்வான் பேசி இருந்தாராம். அது குறித்து சமீபத்தில் சபரியின் அண்ணன் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சிலர் தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக கண்டதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சபரிக்கும் பவதாரிணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் உண்மைதான்.

பவதாரிணிக்கு திருமணமாகும் போது 21 வயது தான். அந்த வயதில் ரொம்பவும் மெச்சூர் ஆகாமல் இருந்ததாலோ என்னவோ அவருக்கும் அவருடைய கணவருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தது. ஆனால் அதற்கு பிறகு பவதாரிணிக்கு பொறுப்புகள் வந்த பிறகு கணவன் மனைவி இருவரும் நன்றாகவே புரிந்து கொண்டனர். அதுபோல சபரியும் பவதாரிணி மீது அதிகமான பாசம் வைத்திருந்தார்.

 Ilayaraja Daughter Bhavatharani what asked her husband at the last moment

கொரோனா காலத்தில் சபரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் கூட பவதாரிணி தான் முழுமையாக சபரியை பார்த்துக் கொண்டது. அதுபோல பவதாரிணிக்காக பல நிகழ்ச்சிகளையும் சபரி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் சபரி அதிகமாக உடைந்து போயிருந்தார். பிறகு யுவன் ஆலோசனைப்படி ஒரு டாக்டரிடம் பேசி அவர் சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க கூட்டிட்டு போயிருந்தார்.

 Ilayaraja Daughter Bhavatharani what asked her husband at the last moment

அங்கு கூட பவதாரிணி சபரியிடம் எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க எனக்கு பாடணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார். அதற்கு சபரியும் சரி என்று சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இப்படியாகும் என்று நாங்கள் நினைக்கலை என்று அந்த பேட்டியில் பவதாரிணியின் கணவரின் அண்ணன் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+