இளையராஜாவின் மருமகள் உடைத்த ரகசியம்..விக்ரம் பிரபுவுக்கு ஜோடியா நடிக்க சொல்லி ஏமாத்த பார்த்தாங்க..!
சென்னை: இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருக்கும் இளையராஜாவின் மருமகள் சீரியல் நடிகை விலாசினி தற்போது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார்.
தன்னிடம் போன் பண்ணி ஒரு நபர் நீங்க விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வரீங்களா என்று ஏமாற்ற பார்த்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

விசாலினி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரேடியோ நிறுவனத்தில் ஆர்ஜேவாக இருந்து தற்போது சின்னத்திரையில் நடிகையாக விலாசினி மாறி இருக்கிறார். நாம் போன் செய்யும் போது சில நேரங்களில் நீங்கள் டயல் செய்த நபர் வேறொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்லப்படுவது கூட இவர் பேசியது தானாம்.
ஆரம்பத்தில் ஆர்ஜே வாக இருந்த விலாசினிக்கு சினிமாவில் டப்பிங் செய்வதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேலாக டப்பிங் செய்திருக்கிறாராம். ஆரம்பத்தில் இருந்து இவருக்கு பாடகியாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதோடு ஆர்ஜேவாக இருந்த இவர் அதற்குப் பிறகு ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக வேலை கிடைத்து இருக்கிறது. அதற்கு பிறகு தான் சின்னத்திரையில் சில துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன், ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாக கொண்டிருக்கும் தவமாய் தவமிருந்து போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு விலாசினி வேறு யாரும் இல்லையாம். பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வரும் இளையராஜாவின் மனைவியின் அண்ணன் மகள் தானாம். ஆனாலும் சினிமாவில் இவர் வாய்ப்பு தேடிக் கொண்டு இருக்கும் போது தனக்கு நடந்த சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் பொதுவா சினிமாவில் நடிகர் நடிகைகளை நேரடியாக நிறுவனங்கள் செலக்ட் செய்வதில்லை. அதற்கு நிறைய ஏஜென்சி இருக்கிறது. அவற்றில் பெரும்பான் ஏஜென்சிகள் பொய்யாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதோடு அவர் மேலும் பேசுகையில் இப்படித்தான் ஒரு நபர் என்னிடம் போன் செய்து விக்ரம் பிரபுவிற்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.
உடனே நான் யார்டா நீ என கேட்டேன். எதுக்காக அப்படி கேட்டேனா, எனக்கே தெரியும்.. நடித்தால் நான் கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியும். ஆனால் அவர்கள் போன் செய்து என்னை ஏமாற்ற பார்த்தார்கள். இந்த மாதிரி ஆட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். தற்போது இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications