Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா தாய்மாமா தான்..அவ்ளோ ஹாரஸ்மென்ட்..ஆனா அப்போ யாரும் உதவல..நடிகை விலாசினி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை விலாசினி தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் இளையராஜா தன்னுடைய மாமா என்றும் தனக்கு பெரிய குடும்பம் இருந்தும் உதவி செய்யவில்லை என்று வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் பல பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் எனக்கும் நடந்தது என்று அவர் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

Ilayarajas daughter-in-law actress Vilasini had problems in her life

ஆர்ஜே, விஜே, டப்பிங் கலைஞர் என்று பல திறமைகளை கொண்டிருக்கும் விலாசினி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ரா கேரக்டரில் இவர் நடித்திருப்பார்.

ஆனால் அந்த சீரியலில் கதை போலத்தான் விலாசினி வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதாம். அந்த சீரியலில் தன்னுடைய அம்மாவிடம் பேச வேண்டும் என்றால் கூட யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து தான் பேசுவார். அதுபோல தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்தது என்று அவர் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னணி இசையமைப்பாளராக பல வருடங்களாக இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர்தானம். அதாவது விலாசினியின் அப்பாவின் அக்கா கணவர் தான் இளையராஜாவாம். அதுபோல இளையராஜா தன்னுடைய பாட்டியின் மகன் என்றும் கூறியிருக்கிறார். எனக்கு எப்படி பார்த்தாலும் அவர் மாமா முறைதான்.

அதனால் சின்ன வயதில் இருக்கும் போது இருந்தே கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு பிரேம்ஜியோடு ஒன்றாக வளர்ந்து வந்தேன். ஆனாலும் பாடகியாக வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டு இருந்த நிலையில் அதற்காக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். அப்போதுதான் பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ஆரம்பத்தில் ரேடியாவில் ஆர்.ஜேவாக வேலை பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தொடர்ந்து ஆதித்யா டிவியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து கொண்டிருக்கும் போது தான் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ஆனால் திருமண வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி இல்ல. என்னுடைய கணவர் பற்றி தெரியாமலே நான் கல்யாணத்துக்கு சம்மதித்தது பெரிய தப்பா போய்விட்டது. அவர் வேறு ஒரு பொண்ணோடு தொடர்பில் இருந்தார். அதோடு என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு தான் தன்னுடைய அம்மாவையும் கவனித்து வருகிறேன் என்றும் எனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார். நமக்கு கையில் ஒரு வலி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு என்ன பண்ணலாம் என்று யாராவது கேட்டால் தானே நாமும் சொல்லுவோம். ஆனால் அப்படி கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் நானே அதை தடவி கொடுத்து விட்டு வாழ பழகி விட்டேன். அது போல இந்த இண்டஸ்ட்ரியில் நிறைய ஹாரஸ்மென்ட் இருக்கு அதையெல்லாம் தாண்டி தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் விலாசினி உருக்கமாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+