Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறி அழுத பாரதிராஜாவுக்கு துக்கத்தோடும் இளையராஜா சொன்ன வார்த்தை.. கண் கலங்க வைத்த காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமான நிலையில் இன்று அவருடைய உடல் தேனியில் இளையராஜாவின் பண்ணை வீட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பவதாரணியின் உடலை பார்ப்பதற்காக பாரதிராஜா தள்ளாடியபடி வந்து கதறி அழுது இருக்கிறார். இது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.

தன் மகள் இறந்த சோகத்தில் மனதில் துக்கத்தை அடக்கி கொண்டிருக்கும் இளையராஜா, பாரதிராஜா அழும் போது அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த உருக்கமான காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Ilayarajas daughter Bhavatharini passed away Ilayaraja cry

தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

தற்போது பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதற்கு பிறகு பல மருத்துவர்களிடம் பார்த்தும் குணமாக்க முடியாத நிலையில் பவதாரிணி இருந்த நிலையில் தான் அவருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் அழுத்தி இருக்கிறது. இதன் பின்னர் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு அடக்கம் செய்ய வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இளையராஜாவின் நண்பரான பாரதிராஜா பவதாரணியின் உடலை பார்க்க, தன்னால் நடக்க முடியாத நிலையிலும் தள்ளாடியபடி அங்கு வந்து பவதாரிணியின் உடலை பார்த்து, " பவ்தா அப்பா வந்திருக்கேன் மா" என்று கதறி அழுது கொண்டு இருந்திருக்கிறார்.

Ilayarajas daughter Bhavatharini passed away Ilayaraja cry

அப்போது தான் பெற்று, கையில் தூக்கி கொஞ்சி விளையாடி மகளின் உயிர் அற்ற உடலை பார்த்து... சோகமும் துக்கமும் தன் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தாலும், தன்னுடைய நண்பன் பாரதிராஜா அழும்போது பாரதிராஜாவுக்கு இளையராஜா ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டகத்தின் அருகிலேயே இளையராஜா அமர்ந்திருந்து தன்னுடைய மகளின் முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியாக சிறிது நேரம் பார்த்து இருக்க, பவதாரிணி சகோதரர்களும் சுற்றி நின்று பவதாரணியின் உடலை பார்த்து கண்கலங்கி கொண்டு இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+