கதறி அழுத பாரதிராஜாவுக்கு துக்கத்தோடும் இளையராஜா சொன்ன வார்த்தை.. கண் கலங்க வைத்த காட்சி
சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமான நிலையில் இன்று அவருடைய உடல் தேனியில் இளையராஜாவின் பண்ணை வீட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பவதாரணியின் உடலை பார்ப்பதற்காக பாரதிராஜா தள்ளாடியபடி வந்து கதறி அழுது இருக்கிறார். இது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
தன் மகள் இறந்த சோகத்தில் மனதில் துக்கத்தை அடக்கி கொண்டிருக்கும் இளையராஜா, பாரதிராஜா அழும் போது அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த உருக்கமான காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
தற்போது பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதற்கு பிறகு பல மருத்துவர்களிடம் பார்த்தும் குணமாக்க முடியாத நிலையில் பவதாரிணி இருந்த நிலையில் தான் அவருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் அழுத்தி இருக்கிறது. இதன் பின்னர் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அடக்கம் செய்ய வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இளையராஜாவின் நண்பரான பாரதிராஜா பவதாரணியின் உடலை பார்க்க, தன்னால் நடக்க முடியாத நிலையிலும் தள்ளாடியபடி அங்கு வந்து பவதாரிணியின் உடலை பார்த்து, " பவ்தா அப்பா வந்திருக்கேன் மா" என்று கதறி அழுது கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது தான் பெற்று, கையில் தூக்கி கொஞ்சி விளையாடி மகளின் உயிர் அற்ற உடலை பார்த்து... சோகமும் துக்கமும் தன் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தாலும், தன்னுடைய நண்பன் பாரதிராஜா அழும்போது பாரதிராஜாவுக்கு இளையராஜா ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டகத்தின் அருகிலேயே இளையராஜா அமர்ந்திருந்து தன்னுடைய மகளின் முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியாக சிறிது நேரம் பார்த்து இருக்க, பவதாரிணி சகோதரர்களும் சுற்றி நின்று பவதாரணியின் உடலை பார்த்து கண்கலங்கி கொண்டு இருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications